என்னுள் ஏன் வந்தாய்?

என்னுள் ஏன் வந்தாய்? உன்னைப் பற்றியே சிந்திக்கச் செய்து விழுங்கிக் கொள்கிறாய் என் பகல்களை.. என் இரவுகளையும் களவாடிக் கொண்டாய்.. உற்சாக வார்த்தைகளோடு கிறங்கும் வார்தைகளையும் தேடுகிறேன் உனக்காக..   கருவாக என்னுள் உருவான உன்னை அழகாய்ச் சீராட்டிப் பிரசவிப்பது எக்கணமென உன்னையே ஏந்துகிறேன்..   சுகப்பிரசவமாய்ப் பெற்றெடுக்கிறேன் என் பார்வையில்.. குறைப்பிரசவமாய் சில கண்களுக்குத் தெரிவதைப் பற்றிக் கவலையில்லை.. நான் பிரசவித்த நீ.. என் சொந்தம்.. நீ தரும் ஆத்ம திருப்தியின் போதை வேறில்லை.. என்ன…