கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு ராகு, கேது நின்றால்:-தாய், தந்தை வர்காதிகளுக்கு குற்றம், தரித்திர தன்மை, பிற மதத்தினரால் பயம், துர்தேவதா தேவதைகளால் பாதிப்பு, மது, மங்கை போன்ற ஈடுபாடுகள் அதிகம். வெளியிடங்களில் ஏற்படும் அவமானம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு சனி நின்றால்:- நீண்ட ஆயுளுக்கு பங்கம் கடுமையான சோதனைகளுக்கு ஆளாகுதல், தோல் – வாதம் போன்ற நோய் தொல்லை சிறை பயம் அபராதம், தகாத நடவடிக்கைகளால் அவமானம் எதிரிகளால் வரும் ஆபத்துக்கள்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு குரு நின்றால்:- குழந்தைகள் பாதிப்பு அவர்களால் நன்மை இல்லாமை அவர்களால் அவமானம், பொருளாதாரத்தில் சீர்குலைவு, அடிக்கடி பணத்தட்டுப்பாடு, மூளை வளர்ச்சி குறைவு, உயர்ந்த பதவிகளில் வீழ்ச்சி இறக்கம். சுக்கிரன் நின்றால்:- இல்லற வாழ்வு சிறப்பில்லாமை, கணவன், மனைவி ஒற்றுமைக் குறைவு, விவாக தடை, தாய் வகை பாதிப்பு, மேக ரோகங்கள், பெண்கள் கையில் அபகீர்த்தி பாதிப்பு, துர்நடத்தையால் அவமானம்.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு செவ்வாய்நின்றால்:- சகோதரர்கள் இல்லாமை, ஒற்றுமைக்குறைவு, பிரிந்து வாழ்வது, இரத்த சம்பந்தமான நோய் தொல்லைகள், நிலம், விவசாய விசயங்களின் பாதிப்பு எதிர்பாராத விபத்து நெருப்பால் பயம். புதன் நின்றால்:-  மாமன் வர்க நாசம், அவர்களால் நன்மை இல்லாத நிலை கல்வியில் தடை, கற்ற கல்வி கைகொடுக்காத சூழ்நிலை, நரம்பு, தோல் சம்பந்தமான நோய் பயம், தொழில் வியாபாரங்களால் பாதிப்பு.

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 கோள்களின் கோலாட்டம் – 1.12

நட்சத்திர பாவ ஆய்வு லக்கினாதிபதி நின்ற நட்சத்திரத்தின் எதிரிடையான நட்சத்திரத்தில்.              சூரியன் நின்றால்:-  தந்தை வகை ஆதரவு சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது.  அரசாங்க வகையால் தொல்லைகள் கண், எலும்புகளில் பாதிப்பு அரசு வகை தொழில் இல்லாமை நீடிக்காமை. சந்திரன் நின்றால் :- தாய் வகை ஆதரவு, சுகம் சொத்து வகைகள் கிடைப்பது அரிது. மனக்கலக்கம், பயம், உடல் பாதிப்பு, ஜலகண்டம், தொழில் வகையில் பல துன்பங்கள், எதிலும் பிடிப்பற்ற நிலை.

உங்கள் பாதையை

உங்கள் பாதையை நீங்களே தேர்ந்தெடுங்கள்.. ஏனென்றால்.. நடக்கப்போவது உங்கள் கால்கள் தான்.. அடுத்தவர்களது அல்ல! விருப்பங்களுக்கே விலை அதிகம்.. மகிழ்ச்சிக்கு அல்ல!

மன்னிக்கப் பழகிவிட்ட

மன்னிக்கப் பழகிவிட்ட எவரும் பிறரின் குற்றங்களை சுமந்து திரிவதில்லை… அத்தனையும் அடங்கியதே வாழ்வு என்ற பக்குவம் வரும் நேரம் வாழ்வை தொலைத்திருப்போம் என்பதே நிதர்சனம்.

வாழ்க்கையின் ரகசியம்

ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், “அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?” அம்மா சொன்னாள், “எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!” அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, அவனது ஆசிரியை  “நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?” என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன. ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் “நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்” என்றான். ஆசிரியை கோபமாக, “உனக்குக் கேள்வி புரியவில்லை”…

சோம்பேறித்தனத்திற்கு விலை

எறும்பும் வெட்டுக்கிளியும் எறும்பும் வெட்டுக்கிளியும் மிகவும் வித்தியாசமான ஆளுமைகளுடன் சிறந்த நண்பர்களாக இருந்தன. வெட்டுக்கிளி தனது நாட்களை உறங்கியோ அல்லது கிதார் வாசித்தோ கழிக்கும் போது எறும்பு உணவை சேகரித்து தனது எறும்பு மலையை கட்டும். எப்போதாவது வெட்டுக்கிளி எறும்பிடம் ஓய்வு எடுக்கச் சொல்லும். இருப்பினும், எறும்பு மறுத்து, தனது வேலையைத் தொடரும்.  விரைவில் குளிர்காலம் வந்தது, இரவும் பகலும் குளிர்ச்சியாக இருந்தது. ஒரு நாள் எறும்புகளின் கூட்டத்தினர் சில சோள தானியங்களை உலர்த்தும் முயற்சியில் மும்முரமாக…

ஒற்றுமையே வலிமை

ஜெய் உப்புமா! ஒரு கல்லூரி விடுதியில் தினமும் காலை உப்புமா போடப்பட்டது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். எனவே விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தெரிவு செய்ய வாக்கெடுப்டை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமா வெறி பிடித்வர்கள் 20 பேர் அதற்கு வாக்களித்தனர். ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல்…

கொடுப்பதில் உள்ள மகிழ்ச்சி

 மலையில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண் ஞானி  ஒரு ஓடையில் ஒரு விலையுயர்ந்த கல்லைக் கண்டாள்.    அடுத்த நாள் அவள் பசியுடன் இருந்த மற்றொரு பயணியைச் சந்தித்தாள்,  பெண் தனது ஞானி உணவைப் பகிர்ந்து கொள்ள தனது பையைத் திறந்தாள்.  பசியுடன் இருந்த பயணி அந்த விலையுயர்ந்த கல்லைப் பார்த்து,  அந்தப் பெண்ணிடம் அதைத் தருமாறு கேட்டார். அவள் தயங்காமல் செய்தாள். பயணி தனது அதிர்ஷ்டத்தைக் கண்டு மகிழ்ந்து புறப்பட்டார். அந்த கல் தனக்கு…

எனக்கும்தான்

அமைதியாக இருந்தது அந்த காட்டுப் பகுதி. அதில் ஒரு துறவியோடு நான் பேசிக் கொண்டிருந்தபோது கால்களை விந்தியபடி ஓர் இளைஞன் வந்தான். துறவியே எனக்கு ஆறுதல் அளியுங்கள். என் பாவங்கள் என் மீது சுமையாக அழுத்துகின்றன” என்றான்.    அதற்கு அந்தத் துறவி  என் மீதும் எனது பாவங்கள் சுமையாக அழுத்துகிறது” என்றார்.  ஆனால் நான் ஒரு திருடன் என்றான் அவன்.  நானும் ஒரு திருடன்தான் என்றார் துறவி.  நான் ஒரு கொலைகாரன். நான் கொன்றபோது மக்கள்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  69

 வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   68

மேலை நாட்டின் தற்கால ஆராய்ச்சிகள்,தூல உப கரணங்கள் மூலமே பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டையும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் நிரூபித்துள்ளது. ஜடப் பொருட் கடலில் சின்னஞ்சிறு அலைகளாகவோ அலைத் தொகுதிகளாகவோ இருக்கிறோம்; அது போலவே உடம்பும் மனமும் ஜடப்பொருளாகிய கடலில் சின்னஞ்சிறு அலைகளே, அதாவது பெயர் வேறுபாடே என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே இந்திய மன இயல் காட்டியுள்ளது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   67

நம்மிடமிருந்து இன்றைக்கு உலகம் பெற விரும்புகின்ற மற்றொரு மகத்தான கருத்து , உலகம் முழுமையின் ஆன்மீக ஒருமை ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கு, இல்லை, இந்த உலகம் முழுவதற்க்கும் – உயர்ந்தோரைவிடப் பாமரருக்கு, படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு, பலசாலிகளை விடப் பலவீனருக்கு- தேவையானது இந்தக் கருத்தே.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   66

அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும் வரை நாம் இவ்வாறு செய்துகொண்டே இருக்க வேண்டும்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   65

இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர் அது தான் செய்யப்பட வேண்டியது, கொடூரங்கள் அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை நிச்சயம் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம்.

உரையாடலின் ஒரு பகுதி  73

அதில் உள்ள கருத்து இன்பத்தை, சந்தோஷத்தை இன்பம் சந்தோஷம் என்று சொல்லாமல் அறிவு என்ற ஒரு வார்த்தையில் குறிப்பிட்டு அந்த அறிவை அடைய வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் அந்த அறிவை நாம் பெற்றால் நாம் நினைக்கின்ற, நினைத்துக் கொண்டிருக்கின்ற நிரந்தர இன்பம் நம் வசப்படும் என்கிறார்கள். அது என்ன அறிவு என்று சிந்தித்தால் அந்த அறிவுக்கு பிரபஞ்ச அறிவு என்ற விளக்கம் வருகிறது.

உரையாடலின் ஒரு பகுதி  72

இது எதனால் தொடர்ந்து இன்பம் தர கூடியது மனிதனிடம் _நிறைய இருந்தாலும் ஒரு கால கட்டத்தில் அவனுக்கு இன்பம் எது தந்ததோ அதனை சீ சீ என்று ஒதுக்கிறானே இது ஏன்? இப்படி சிந்தித்துக் கொண்டே போனால் நாம் வேதங்கள் உபநிஷத்துகளிடம் தான் சென்றடைய வேண்டி இருக்கிறது. வேறு வழி இல்லை அது பொய்யான கற்பனையாக நமக்கு தோன்றினாலும் அதில் தான் உண்மையே இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் அதில் மட்டும் தான் நிரந்தர இன்பம் பற்றியும்…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  69

வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.

உரையாடலின் ஒரு பகுதி 71

மனித வாழ்வின் லட்சியம் எது? இது வினா, பதில் நிறைய வருகிறது கூட்டி கழித்து பார்த்தால் மனிதன் சந்தோஷமாய் இருப்பது பதில், இத்தனை தான் என்று நினைத்தால் இதில் எத்தனை கிளை பதில்கள் சந்தோஷத்தை நாடி இன்பத்தை தேடி என்று மனிதன் செய்யும் செயல்கள் அனைத்தும் அவனுக்கு இன்பத்தை தந்துவிட்டதா என்றால் பூரண இன்பம் தரவில்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியானால், நிரந்தர இன்பம் எது என்ற வினாவை வைக்க வேண்டியிருக்கிறது. இனிப்பு பண்டம்…

உரையாடலின் ஒரு பகுதி 70

வானின் நட்சத்திரங்களை விஞ்ஞானி கணக்கிட்டுக் கொண்டிருக்கிறான். ஞானியின் உள்ளத்தில் வானின் நட்சத்திரங்கள் இடம் கொள்ளுகின்றன இவை இரண்டும் என்றுமே ஒன்றாகாது. எப்போதுமே எந்த துறையிலுமே அரை வேக்காடுகளினால், தான் கோளாறு உண்டாகிறது. ஆத்ம தரிசனத்தின் முன்னனியில் கருணை, அன்பு மிக முக்கியமானது ஆனால் ஆத்ம தரிசனத்தின் அரை வேக்காடான நிலையில் மத வாதம் கருணையற்ற ரணகளங்களை சரித்திரத்தில் ஏற்படுத்துகிறது.

உரையாடலின் ஒரு பகுதி 69

மனதிற்கு பற்றுதல் இல்லாத சூழ்நிலையில் இருந்தும் ஒட்டுதல் இல்லாத உறவுகளில் இருந்தும் விடுபட்டு வெளியேறுவது மனதிற்கு எத்தனை சந்தோஷம் தருகிறது. அந்த சந்தோஷம் நீடித்து நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்? ஒன்று தான் செய்ய வேண்டும் பற்றுதலோடும், ஒட்டுதலோடும் பிரபஞ்சத்தை படைத்த இறையின் உணர்வோடு இருக்க வேண்டும் அத்தனைதான். விஞ்ஞானம் மனிதனின் உச்ச கட்ட முயற்சியின் விளைவு ஆன்மீகம், மனித முயற்சிகளை துறந்த ஆழமான செயலின்மையின் விளைவு.

சனி 10

சனி பலமுள்ளவர் தொழில்துறைகளில் விற்பன்னர்களைத் தோற்றுவிப்பார், பிறகு தியாகம் செய்வார், வேத தத்துவங்களை உணர்த்தி ஒருவரை விவேகியாக்குவர் எதிர்காலத்தை உணரும் மேதைகளையும் எதையும் தாங்கும் சக்தி படைத்தவர்களையும் உருவாக்குவார். சனி தன்னுடைய தசாகாலத்தில் பலமுள்ள சனி, 4  11  ஒருவரை மலையளவுக்கு உயர்த்தவும், இதர கிரக நிலைகள் பலவீனமாக இருந்தால் மலையிலிருந்து கீழே தள்ளவும் செய்வர்.

சனி 9

சனி, சுக்ரன் சஷ்டாஷ்டகமாக இருந்தால் நபும்சகராக இருப்பர். சனி 10 ம் வீட்டோடு தொடர்பு ஏற்படின் விவசாயத்துறையிலும், உலோகத்துறையிலும், சிறிய நிறுவனத்தில் தொழில் செய்வர். சனி 10ல் பலமுற்று இருந்தால் உத்தியோக நிலை ஆட்டம் காணும், மேலதிகாரிகளின் தொந்தரவு இருக்கும்.

சனி 8

சனி கும்பத்தில் இருப்பின் பல தொழில்களில் ஈடுபடுவர், கோபிஷ்டி, குடி பழக்கம், கெட்ட பழக்கம் பேச்சில் துடுக்கு இருக்கும், உண்மை இராது.  சனி மீனத்தில் இருப்பின் அரசாங்கத்தில் செல்வாக்கு, வாக்குவன்மை, ஸ்தாபன தலைமை, நல்ல மனைவி மக்கள், நற்பண்பு, தெய்வீக நெறியில் ஈடுபாடு உண்டு. சனி, சந்திரன் இருவரும் நீசம் பெற்று சூரியன் கும்பத்தில் இருந்தால் சரீர உறுப்பு பலவீனமடையும்.

சனி 7

சனி விருச்சிகத்தில் இருப்பின், கடின உழைப்பு, உடல்நலக்கோளாறு, கோபகுணம், பொறமை குணம் உள்ளவர். சனி தனுசு ராசியில் இருப்பின் செல்வம் குவிப்பார்கள், மனிதாபிமானம் உள்ளவர், நல்லொழுக்கம், மென்மைத்தன்மை அமையும், தலைமை பொறுப்பு வகிப்பர். சனி மகரத்தில் இருப்பின் சொந்த ஊரைவிட்டு அன்னிய ஊரில் வாழ்வர் அறிவாற்றல், புகழ் உன்னதஸ்தானம் ஏற்படும், வசதியான வாழ்க்கை அமையும்.

சனி 6

சனி சிம்மத்தில் இருப்பின் உறவினர்களுடன் சண்டை சச்சரவு கெட்ட செயலில் நாட்டம் மக்கள் நலம் திருப்திகரமாக இராது. உத்தியோகம் செய்து பொருள் சேர்ப்பார்கள். சனி கன்னியில் இருப்பின் மற்றவர்களுக்காக தியாகம் புரிவர், ராணுவத்துறையில் பொறுப்பு வகிப்பர், பொருளாதார சுபிட்சம் சீராக அமையாது. சனி துலாத்தில் இருப்பின் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பர், தலைமை தாங்கும் தகுதி ஏற்படும், வெளிநாடு செல்வர், தொழில் துறையில் அபிவிருத்தி காணலாம்.