ஆன்மீகத்தில் எத்தனை வகை. 2

உண்மையில் ஆன்மீகத்தின் முகவரியை சிந்தித்து பார்த்தால் கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்ற கதைதான். அது, இது, எது, அப்படி, இப்படி எப்படி, ஏன், எதற்கு, என்பது போல் இன்னும்  உள்ள பல ஊசலாட்டங்கள் தான் ஆன்மீகத்தின் முகவரிகள்.

ஆன்மீகத்தில் எத்தனை வகை. 1

தனி ஒருவருக்கு உணவில்லையென்றல் ஜகத்தினை அழிப்பது பாரதியின் ஆன்மீகம், அடங்கமறு, அத்துமீறு புரட்சி செய் இது ஒரு கூட்டாரின் ஆன்மீகம், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது ஏசு பிரான் ஆன்மீகம் ஏழைகள் சிரிப்பினில் இறைவனை காண்பது பகுத்தறிவாளர்கள் ஆன்மீகம். எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்துவிட்டோம் நீங்கள் உங்கள் குலதெய்வத்தை கும்பிட்டு கொள்ளுங்கள் என்பது மருத்துவர்கள் ஆன்மீகம் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது கண்ணனின் ஆன்மீகம்.

சோம்பேறித்தனம் 2

எப்போதும் ஆசையுடனும் மனப்பூர்வமாகவும் வேலைகளை செய்ய கற்றுக்கொண்டாலே சோம்பேறிதனம் இருக்காது வாழ்வின் விடியலில் நாம் ஆசைப்பட்ட விடியலில் இருப்போம் இது அனுபவத்தால் மட்டுமே தெரிந்து புரிந்து கொள்ளமுடியும்.

சோம்பேறித்தனம் 1

காலையில் நாம் எழவைத்த அலாரத்தை அது அடித்தவுடன் நாம் அதை அடித்து அணைத்துவிட்டு போர்வைக்குள் இன்னம் கொஞ்ச நேரம் என்று உறக்கத்தை தொடரும் சோம்பேறித்தனம் நம்முள் இருக்கும் வரை வாழ்க்கையில் வெற்றி எனும் விடியலை எப்போது பார்க்க முடியும் மேலே சொன்ன செயலை தொடர்ந்து கொண்டிருப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எப்போது விடியல் என்று

சந்தோஷமாய் கேட்பவர்கள் இருந்தால்

சந்தோஷமாய் கேட்பவர்கள் இருந்தால் வயதானவர்களுக்கு தங்களின் பழைய நினைவுகளை பற்றி சொல்லுவதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம் வேறு எதுவும் இல்லை._

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம் 82

தூது சகுனம் …..  ரோகியின் குணங்கள் தெரியக்காட்டி வைத்தியரிடத்தில் சென்று வைத்தியரை அழைக்க வருந்தூதனது லக்ஷணங்கள் மருத்துவர்கள் அநுசரித்து  சாத்தியா சாத்தியங்கள் அறிந்து ரோகியினிடத்திற்கு ஏகுகிறதற்கு லக்ஷணங்களை பூர்வருஷி சிரேஷ்டர்களால் சொல்லியதை இவ்விடத்தில் விவரத்து எழுதுகிறேன். ஏழு தினத்தில் மரணமடையும் தூத லக்ஷணம் …..  எந்த அழைக்கப்போகிறவன் கையில் மதுரமான பண்டங்களைக் கொண்டு வைத்தியனை அழைக்க ஏகுவானாகில், அந்த ரோகி ஏழு தினங்களில் மரணமடைவானென்று அறியவேண்டியது. நாலு நாழிகையில் மரணகுறி தூத லக்ஷணம் ……  ஒரு தூதன்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  81

மரண லக்கின திதிகள் …..  விருச்சிகம், மேஷம் லக்கினத்தின் நந்தாதி திதியிலும், மிதுனம், கன்னிகை இந்த லக்னித்தின் பத்திராதிதியிலும், கர்க்கடகலக்கினத்தின் ஜயாதிதியிலும், கும்பம், சிங்கலக்கினங்களின், ரிக்த திதியிலும், தனுசு லக்கினத்தின் பத்திராதிதியிலும், மிதுன லக்கின ஜய திதியிலும், மகர லக்கின பூரண திதியிலும் இந்த லக்கின திதிகளில் ரோகங்கள் உண்டாகிறதினால் ரோகியானவன் மரணமடைகின்றான். திதிகளின் விவரணம் …..  செவ்வாய்க்கிழமை கிருத்திகை நக்ஷத்திரம் நந்தாதிதி, புதன் கிழமை, ஆயில்ய நக்ஷத்திரம் பத்திராதிதி வியாழக்கிழமை, மக நக்ஷத்திரம், ஜயா திதி…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  80

மரண லக்ஷணம் …..  இரவில் சந்திர பிம்பத்தைக் காட்டினால் இரண்டு சந்திர பிம்பங்கள் இருக்கிறதென்றும் அல்லது பகலில் சந்திரி, சூரியர்கள் இருக்கிறார்கள் என்றும் இரவில் நக்ஷத்திரங்கள் தென்பட வில்லை என்றும் சிவப்பெருமான் தென்படுகிறறென்றும் மலையின் மேல் கந்தருவர்கள் பாடுகிறார்களென்றும் நாகலோகம் அதோயிருக்கிறதென்றம் சொல்லுவான் இவ்விகாரங்கள் பஞ்சதத்துவங்களின் ( பஞ்ச பூதம் ) கெடுதலினால் உண்டானது இவன் சீவிக்கமாட்டான் என்று அறியவும். ஒரு வாரத்தில் நோய் நிவர்த்தி குறி …..  மனிதர்களுக்கு புரட்டாசி மாதத்தில் உத்திர நக்ஷத்திரத்தில், தைமாத…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  79

நாலாவது விதம் ……  சிரத்தில் வியர்வைஉண்டாகிக் கொண்டு வாயிநிடமாகத்தானே மூச்சு விட்டுக்கொண்டு இருப்பதால் எட்டு நாடிகள் பலஹீனப்பட்டு சீதளமடைதலினால் அந்த ரோகி சீவிக்க மாட்டான் ( உயிரோடு இருக்கமாட்டான் ). ஐந்தாவது விதம் …..  மரணமடையும் ரோகிக்கு நாக்கு, மூக்குநுனி, இரண்டு புருவங்கள் தாலுதேசம் இவைகள் தென்படாது இவைகளுக்கு அருந்தததி என்றும் துருவம் என்றும் விட்சு திரிபாதி மாத்ரு மண்டலமென்றும் வேறு நாமதேயங்கள் ஆரியர்கள் வைத்திருக்கிறார்கள். ஆறாவது விதம் …..  மனதானது பிரமித்தால் அவர்களது வார்த்தைகள் பிதற்றவாய்…

அனுபவ  வைத்திய தேவ ரகசியம் இரண்டாவது காண்டம்  78

அசாத்திய லக்ஷணம் …..  வாதமானது பித்த ஸ்தானத்திலும், பித்தமானது கபஸ்தானத்திலும், கபமானது கண்டஸ்தானத்திலும் இருக்குமாகில் அகத்தியம் மரணம் சம்பவிக்கும்.  மேலும் இரவில் அதிகதாஹமும், பகலில் சீதளமும் கண்டத்தில் ( தொண்டையில் ) கோழை கட்டுதலும் ஹீனசுரமும் அதிகபேதியும் சுவாசத்துடன் கூடிய இருமலும், விக்கலும், பக்கசூலையும், உதரசூலையும் முதலிய துர் ரோகங்கள் இருந்தால் அவன் பிழைக்கமாட்டான். இரண்டாவது விதம் …….   மார்பு, கால், கைகள், நாசிகை முதலியது சீதலமாயும், சிரசு மாத்திரம் கொதித்துக் கொண்டிருந்தால் அந்த ரோகி ஜீவிக்கமாட்டான்.…

அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்

திருக்கடையூர் அருகே உள்ளது அனந்தமங்கலம் என்ற ஊர் இங்கு எழுந்தருளியிருக்கும் ஆஞ்சநேயருக்கு நெற்றிக்கண் உள்ளது. சிவபெருமானைப் போல நெற்றிக்கண்ணுடன் காணப்படும் இந்த ஆஞ்சநேயரை வழிபாடு செய்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்  

பதினாறும் அருளும் ரம்பாபுரி நாதர்!

திருவள்ளூர் மாவட்டம், திருஇலம்பையங் கோட்டூரில் அமைந்திருக்கிறது அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் ஆலயம். இங்கே மேற்கு நோக்கி, தனிச்சந்நிதியில் அருளும் ஸ்ரீரம்பாபுரி நாதர் 16 ஒளிப்பட்டைகளுடன் கூடிய லிங்கத்திருமேனியராக அருள்வது, விசேஷ அம்சம். இவரைத் தரிசித்து வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர்

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில், 6 நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கம் வர்ணம் மாறுகிறது

ஒரே கருவறையில் 3 நரசிம்மர்கள்

சிங்கிரிகுடி தலத்தில் 16 கைகளுடன் திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து எழுந்தருளியுள்ளார். நரசிம்மரின் கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில்

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயத்தையும் இங்கே பார்க்கலாம்

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 25

நமது மதம்தான் உண்மையான மதம். ஏனெனில் கடவுள் ஒருவரே உண்மையானவர் இந்த உலகம் பொய்யானது, கணம் தோன்றி மறைவது, உங்கள் காசு பணமெல்லாம் தூசியைத் தவிர வேறல்ல, உங்கள் அதிகார மெல்லாம் வரம்பிற்கு உட்பட்டது, வாழ்க்கையே பல நேரங்களில் தீமையாகத்தான் இருக்கிறது என்று அது கூறுகிறது. எனவேதான் நமது மதம் உண்மையானது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 24

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! நமது மகத்தான லட்சியம் அதுவல்ல என்று நமது மதம்தான் கூறுகிறது. சில அடிகளுக்குள் அடங்கிவிடுகின்ற பூமியாகிய இந்தக் கோளம் ; நமது மதத்தின் காட்சியைக் கட்டுப்படுத்தவில்லை. நமது மதத்தின் லட்சியம் இவைகளுக்கு அப்பால், இன்னும் அப்பால் உள்ளது; புலன்களுக்கு அப்பால், இடத்திற்க்கு அப்பால், காலத்திற்கு அப்பால் இன்னும் அப்பால், ஆன்மாவின் கடல்போல் பரந்து விரிந்த மகிமையில் இந்த உலகம் சூன்யமாகி, பிரபஞ்சமே ஒரு துளிபோலாகின்றன அந்த இடமே நமது லட்சியம்.  

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 23

நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு எதையும் செய்யவில்லை, என்ற அவர்களுடைய இந்த வாதத்தைவைத்துக் கொண்டே நாம் நமது மதத்தின் சிறப்பை உறுதி செய்யலாம் என்பதை அவர்கள் உணரவில்லை. நமது மதம் மட்டுமே உண்மையான மதம். ஏனெனில் மூன்று நாட்களே நிலைப்பதும் புலன்களால் உணரப்படுவதுமான இந்தச் சின்னஞ்சிறு உலகை வாழ்வின் அனைத்துமாகக் கொள்ளக் கூடாது,

 விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 22

நம்மை மற்ற நாடுகளைக் கொள்ளை அடிப்பவர்களாக ஆக்கவில்லை, பலசாலிகளைப் பலவீனமானவர்கள் மீது நின்றுகொண்டு அவர்களின் உயிர்ச் சக்தியை உறிஞ்சி தங்களை வளமாக்கிக் கொள்ளச் சொல்லவில்லை என்பதுதான். நிச்சயமாக நமது மதம் இதைச் சொல்லவில்லை. தன் காலடியில் உலகையே நடுங்கச் செய்கின்ற படைகளை அனுப்பி , மற்ற இனங்களைச் சூறையாடி நாசப்படுத்த அதனால் முடியாது. எனவே அவர்கள், இந்த மதத்தில் என்ன இருக்கிறது, வாய்க்குத் தீனியும் உடலுக்குப் பலமும் அளிக்காத ஒரு மதத்தில் என்னதான் இருக்க முடியும் என்று…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 21

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் அரசியல், அதாவது சமுதாய முன்னேற்றம், அதாவது இந்த உலகம் தான் மேலை நாட்டினரின் லட்சியம். கடவுள், மதம் என்பதெல்லாம் அந்த லட்சியத்தை அடைவதற்காக உதவுபவை, அவ்வளவுதான். அவர்களே இன்னும் கற்க வேண்டியுள்ளது, இதில் நம்மை விடத் தெரிந்தவர்கள் போல் காட்டிக் கொள்கிறார்கள். கடந்த நூறு இருநூறு ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய மதத்திற்கு எதிராக அவர்கள் கூறிவருவதெல்லாம் என்ன தெரியுமா ? நமது மதம் இவ்வுலக வாழ்க்கைக்கு ஆவன செய்யவில்லை, அது நமக்கு காசு…

காந்தளூர் சாலை போர் 1

சுந்தரசோழன் ஆட்சிக்காலத்தில்தான் சோழ படையானது.  ராஷ்டிரகூடர்களுடன் போரிட்டுத் தொண்டை மண்டலத்தை மீட்டது. ஆனால் அதற்கிடையில் இளவரசனாக முடிசூட்டப்பட்ட அவருடைய மகன் ஆதித்த கரிகாலன் மர்மான முறையில் கொலை செய்யப்பட்டார், சேர, பாண்டிய ஈழ நாட்டுக் கூட்டணியும் காந்தளூர் சாலையில் போர்ப் பயிற்சியும் இந்தக் கொலைக்கான பின்னணி என சொல்லப்படுகிறது.

நவீன மனிதர்கள் தோற்றம் 4

 பல ஆயிரம் ஆண்டுகளாக இப்படி வாழும்போது இயல்பாகவே உடல் தோற்றம், நிறம் போன்றவை சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு மாறிவிடுகின்றன, இதை பரிணாமவியல் கொள்கையில் ஒரு பகுதியாக டார்வின் விளக்கு இருக்கிறார் தற்கால மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து 65,000 ஆண்டுகளுக்குமுன் இந்தியா வடக்கு ஆசியா உள்ளிட்ட பகுதிகளுக்குப் பரவியது. அந்த காலத்தில் இருந்த நிலப் பாலங்கள் வழியாக வெவ்வேறு கண்டங்களுக்கு அவர்கள் நடந்தே சென்றடைந்தார்கள். இந்த பரவல் மத்திய தரைக்கடல் நாடுகள் வழியாகவே நடைபெற்றிருக்க வேண்டும்.…

நவீன மனிதர்கள் தோற்றம் 3

மரபணு ஆதாரங்களும் ஆப்பிரிக்காவே மனித குலத்தின் தாய்மடி என்பதை உறுதிப்படுத்துகின்றன. அப்படியானால் இன்றைக்கு உலகில் வாழும் மனிதர்களிடையே இத்தனை நிறங்கள், தோற்ற வேறுபாடுகள், உயர வேறுபாடுகள் எப்படி வந்தன? எனக் கேட்கலாம், ஒரு குழு தன் தாய்நிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து வேறொரு நிலப்பகுதியில் குடியேறிய பிறகு, புதிய நிலத்தில் நிலவும் கால நிலை, தட்பவெப்பநிலை, புவியியல் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்ப தகவமைத்து வாழ தொடங்குகிறது.

நவீன மனிதர்கள் தோற்றம் 2

ஆப்பிரிக்க கண்டத்தின் தெற்கில் உள்ளது, போட்ஸ்வானா, இந்த நாட்டின் வடபகுதி, இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏரியாக இருந்து, இன்றைக்கு பாலைவனமாக மாறிவிட்ட மக்கடிக்கடி-ஒகவாங்கோ என்ற பகுதிதான் நவீன மனிதர்களின் தாய்மடி, கோய்சான் பழங்குடிகளிடம் நடத்தப்பட்ட மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ ஆய்வுவுகள் மூலம் இது தெரியவந்துள்ளது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய புதைபடிவம் ஒன்று எத்தியோப்பியாவின் ஒமோ கிபிஷ் என்ற இடத்தில்  கிடைத்துள்ளது.   இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது குரங்கிலிருந்து மனித இனம் தோன்றவில்லை, வாலில்லா குரங்குகளுக்கும்,…

நவீன மனிதர்கள் தோற்றம் 1

நவீன மனிதர்கள் தோன்றிய இடம் எது’ என்பது குறித்த ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றன. ஆப்பிரிக்காவில்தான் அது நிகழ்ந்தது என்றாலும் குறிப்பாக எந்த நிலப்பகுதியில் மனிதர்கள் தோன்றினார்கள் என்பதை நமது அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சிலவேளை முட்டாளாக

மூன்று நபர்களுக்கு மரண தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. மூவரும் தூக்கு மேடைக்கு வரவழைக்கப்பட்டனர்.  (1) மதத்தலைவர்.     (2) வழக்கறிஞர்.  (3) இயற்பியலாளர்.  முதலில் மதத்தலைவர் கழுத்தில் கயிறு மாட்டப்பட்டது. “கடைசியாக ஏதாவது சொல்லவருகிறீர்களா?” என வினவப்பட்டது.  ஆண்டவன்! ஆண்டவன்! ஆண்டவன் அவனே என்னை காப்பாற்றுவான் என்றார்.மேடை இழுக்கப்பட்டது, மதத்தலைவரின் கழுத்தை நெருங்கிய போது சட்டென்று கயிறு நின்றுவிட்டது. மக்கள் அதிசயத்தோடு பார்த்தனர். அவரை விட்டுவிடுங்கள்! ஆண்டவன் அவரை காப்பாற்றிவிட்டான். என்றனர் மதத்தலைவர் தப்பிவிட்டார்.  அடுத்ததாக வழக்கறிஞர் அழைத்துவரப்பட்டார்.…

நாம் தான் நிர்மாணிக்கிறோம்  

ஒரு வயதான மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்க வேண்டும் என்பது அவர் திட்டம்! முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு வேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர். “எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும்கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?” என்று பணிவோடு கேட்டார். மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழு…

கறுப்பு கலர் 

 ஒரு பள்ளிக்கூட வாசலில் பலூன்காரர் ஒருவர் பலூன்களை விற்றுக் கொண்டிருந்தார். அவை மேலே பறக்கும் பலூன்கள். அவர் பலூன்களில் காற்றடைத்து விற்பதை ஒரு சிறுமி கவனித்துக் கொண்டிருந்தான். மெல்ல பலூன்காரரிடம் வந்தான். “இந்த பலூன்கள் என் லாமே மேலே பறக்குமா?” என்று கேட்டாள். “ஒரு பறக்குமே. என்ன விஷயம்?”  பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா?” என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி,  சிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை. “ஏம்மா கேக்குற?   இல்ல,…

 ஒரு மாபெரும் கூட்டம் இரண்டு பேச்சாளர்களிடையே போட்டி, யாருடைய பேச்சு அதிக கைதட்டல் பெறும் என்று. கூட்டம் துவங்குவதற்கு முன் இருவரும் ஒரு அறையில் அமர்ந்து அன்றைய கூட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.  அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வர, அவர் எழுந்து போனார். அவரது பேச்சுக் குறிப்புகளை அவசரத்தில் மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் போட்டி பேச்சாளர் அந்தக் குறிப்புகளைப் படித்து விட்டார். அந்தக் குறிப்புகள் அவர் தயாரித்திருந்ததைவிட நன்றாக இருந்தது. …

போர்க்கள யானை

பேரரசன் ஒருவனிடம், வலிமை மிக்க யானை ஒன்று இருந்தது. போர்க்களம் செல்லும் போதெல்லாம் அதன் உடல் முழுவதும், வாட்கள் நிறைந்த கவசங்களால் மூடப்பட்டிருக்கும். அதன் வாலிலும் இரும்புக் குண்டு ஒன்று இணைக்கப் பட்டிருக்கும். போர் சமயங்களில், அந்த யானையின் துதிக்கையி ல் அம்பு படாமல் இருக்க, துதிக்கையை நன்றாகச் சுற்றி வைத்துக் கொள்வதற்குப் பழக்கி இருந்தான் பாகன்.  ஒரு நாள் போர்க்களத்தில் அரச யானை புகுந்து எதிரிப் படைக்குப் பேரழிவைத் தந்தது. அதன் அங்கங்களில் பொருத்தப்பட்டு இருந்த…