சக்தியை சிதற விடாதே

தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் நமது சக்தியைச்சிதறவிடாமல். அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கபூ ர்வமான பணிகளில் நாம் ஈடுபடுவோமாக. யார் ஒருவர் எதைப் பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ. அதை அவர் பெறாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப்பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் முடியாது. இந்தக் கருத்தை நான் மனப்பூர்வமாகநம்புகிறேன் கடந்த காலம் மிகவும் பெருமைக்கு உரியதாக இருந்ததில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆதனால் எதிர்காலம் சிறப்பாக அமையப் போகிறது என்பதைநான் முழு மனதுடன் நம்புகிறேன்.