உண்மையாய் இருக்கும் போது

பாசம் உண்மையாய் இருக்கும் போது அது குடும்பத்திற்க்கு பல நன்மைகளை செய்துவிடுகிறது. துறவு உண்மையாய் இருக்கும் போது அது உலகிற்க்கு நிறைய நன்மையை செய்துவிடுகிறது. இங்கு பாசமோ துறவோ விஷயம் அல்ல உண்மை தான் விஷயம் உண்மையாய் இருந்தால் நல்லதுகள் நடந்துவிடுகின்றன தற்போதைய காலத்தில் உண்மையாய் இருக்க எத்தனையோ பொய்கள் சொல்லவேண்டியிருக்கிறது அதிலும் உள்ள சிக்கல் அத்தனை பொய்களையும் உண்மை போலவே சொல்லவேண்டியிருக்கிறது என்ன செய்ய

சுந்தர யோக சிகிச்சை முறை 33

ஒழுக்கத்தை சில முக்கிய பழக்கங்களாகப் பிரிக்கலாம். அவைகளாவன, குளித்தல், தூக்கம், போகம், பழக்கம். ஸ்நானம் அல்லது குளித்தல் உடலின் வெளிப்பாகத்தை சுத்தமாக வைக்கின்றது. தோல்களில் பதிந்துள்ள வியர்வை, தைலம் கசியும் எண்ணற்ற துவாரங்களை அடைத்து விடாமல் அழுக்குகளை வெளியே தள்ளி தம் தொழிலைச் சரிவரச் செய்ய உதவுகின்றது. நரம்பு சக்தியைப் பொதுவாக அதிகரிக்கின்றது. தோல் நோய் ஏற்படாமல் காக்கின்றது. உடல் சூட்டைக் குறைக்கின்றது. தினம் குளித்தல் அவசியம். குளிர் நீரில் குளித்தலே சீதோஷ்ண ஸ்திதி மாற்றத்தால் உடல்…