சுந்தர யோக சிகிச்சை முறை 11

பிராணாவும் (சுவாசம்) நோயும் இயற்கைக்கு விரோதமான நடத்தையால்தான் எல்லோரும் நோயடைகிறார்களா? ஒரு ஜீவனின் இச்சை, சக்தி, நடத்தைக்கு மீறி நோய் வருவதில்லையா? இயற்கையாகவே பிறக்கும் பொழுது சக்தி மாறாட்டம், ஊனங்களைப் பெறுவதில்லையா? எல்லா மானிடரும் ஒரே சக்தி ஆரோக்கிய வீச்சுடன் பிறக்கிறார்களா? பிறக்கும் பொழுது குருடாயும், நொண்டியாயும், ஊமையாயும், கருவிகள் பங்கமாயும், பிறப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? கெட்ட பழக்கமின்றி தொத்து நோய்கள் கேடு விளைத்தால்? இக்கேள்விகள் கடினமான கேள்விகளே, இவைகளையும் சிந்தித்து, ஆராய்ந்து குழப்பமின்றி, தைரியமாக…

ரொம்ப முக்கியமா சிந்திக்க வேண்டியது

ரீ கலெக்ஷன் ஆப் தாட்ஸ், மனிதர்களுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய சொத்து. நடந்ததை நினைவுக்கு கொண்டு வந்து யோசனைப் பண்ணி தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள மனிதர்களால் மட்டுமே முடியும். மிருகத்திற்கு வருவது போல் கோபமோ, காமமோ சட்டென்று வருவதில்லை. கோபப்பட்டால் என்ன ஆகும்? தரம் தெரியாமல் இடம் புரியாமல், காமவயப்பட்டால் என்ன ஆகும் என்று யோசிக்கமுடியும். தொடர்ந்து யோசிக்கிறவன் ஞானி, எப்போதும் யோசிக்காதவன் மிருகம். யோசனை பண்ணியதின் விளைவு, இன்றைய வாழ்க்கை, இன்றைய வளர்ச்சி.