ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?

இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந் நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும்.

சுந்தர யோக சிகிச்சை முறை 10

பிந்து (விந்து) வீரியம் இருக்கின்றது இதை வெளிப்படுத்தும் பொழுது சுகம் ஏற்படுகின்றது. உடல், புலன், மனம், பிணைந்து சுகம் ஏற்படுகின்றது. இதனின் இயற்கை முறையான உபயோகம், இகத்திலிருப்பவர்க்கு, இல்லற வாழ்வுக்கு அவசியமென்றே கூறுவோம். இயற்கை அனுபதிக்கப்பட்ட சுக உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று இயற்கை வளர்ச்சிக்கு இயற்கை தூண்டும். மறுக்க மிக்க கடினமான சுகங்களில் சுக உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று. தர்ம விரோதமின்றி ஆண், பெண் சேர்க்கையால் உடல் நிலை, காலதேச வர்த்தமானத்திற்குகந்தவாறும், மக்கட்பேறுக்கென்றும் முடிவில் இதை புறக்கணிக்க,…