உரையாடலின் ஒரு பகுதி 8

அதிகார மமதையில் உள்ள சர்வாதிகார அரசுக்கு தேவை உணர்ச்சியற்ற, சுய சிந்தனை இல்லாத தொலை நோக்கு சிந்தனை இல்லாத, அடிமை மக்கள் தான் தேவை. அதற்கு முதலில் மக்களின் மொழி உணர்ச்சியை அழிக்க முயல்வான் அப்படி அந்த மொழி அழியும்போது அதன் இலக்கியம், பாரம்பரியம் அனைத்தும் காணமல் போய்விடும். அந்த மக்கள் முகவரியற்றவர்களாக ஆகிவிடுவார்கள் உண்மையில் நம் நாட்டில் தேச பக்தி என்பது மொழி உணர்ச்சிதான் நன்றாக ஆழ்ந்து, கூர்ந்து பார்த்தால் தெரியும். மொழி உணர்ச்சியை அழிப்பதன்…

சுந்தர யோக சிகிச்சை முறை 7

பொய்யான இன்பத்தை வழக்கமாக கொண்டிருந்தால் நோய்தான் வரும். இன்பம் வராது. சுகம் சாக, அதில் பிணி பிறக்கின்றது. சுகம் மறைய நோய் வளர்ந்து, அதிகமாகிறது, ஆயுளும் குறைகின்றது எவ்வாறு? உண்ணும் கணச் சுகத்தை எம்முறையில் அனுபவிக்கிறோம்? வயிறு நிறைய சாப்பிடுவதால், அளவுக்கதிமாக சாப்பிடுவதால் பலமிழந்து நூறு வயது இருக்க வேண்டிய இரைப்பை கெட்டு, சில வருஷங்களில் உயிரற்ற தோல்பை போல் மாறுகிறது. இயற்கை விரோதமான மிளகாய், காபி, கள், உயிரற்ற தீட்டிய கஞ்சி வடித்த உணவுகளை நிரப்புவதால்…