ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 7

இன்னல்கள் நேர்கின்றன. ஆனால், அவை என்றும் இரா. பாலத்தினடியில் ஒடும் நீரைப்போல் அவை ஒடி மறைந்து விடும். என்னைப் பிரார்த்திப்போர்க்கு இறக்கும் தருவாயில் நான் அருகில் நின்று அபயம் அளிப்பேன் ‘ என்று குருதேவர் (ஸ்ரீ ராமகிருஷ்ணர்) சொல்வது வழக்கம். மேற்கூறியவை, அவரது வாயினின்றும் வெளி வந்த சொற்களாகும். உங்கள் மனச்சுமையை ஸ்ரீராமகிருஷ்ணர் முன் இறக்கி வையுங்கள். கண்ணீருடன் உங்கள் துன்பங்களை எடுத்துரையுங்கள். உங்கள் கை நிறைய நீங்கள் விரும்பியவற்றை அவர் தருவதைக் காண்பீர்கள்.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 52 

செல்வம் எப்போதும் மனத்தைக் கறைப்படுத்துகிறது. நீங்கள் செல்வத்திற்கெல்லாம் அப்பாற்பட்டவரென்றும், செல்வத்தின் மீது உங்களுக்கு எவ்விதப் பற்றும் ஏற்படாதென்றும் நினைக்கலாம். அதை நீங்கள் விரும்பியபோது விட்டு விடலாம். இவ்வாறு எண்ணற்க, ஒரு சிறிய துளை வழியாக அப்பற்று உங்கள் மனத்தினுட் புகுந்து உங்களையறியாமலே கொஞ்சம், கொஞ்சமாகக், கொன்று விடும். ஸ்ரீராமகிருஷ்ணர் பொருளைத் தொடவும் பொறார். எப்பொழுதும் அவருடைய உபதேச மொழிகளை நினைவிருத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் நீங்கள் காணும் இன்னல்களுக்கு மூல காரணமாவது இப்பொருள்தான். அது உங்கள் மனத்தை வேறிச்சைகளிடத்தும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 45

ஒருவன் வார்த்தையாலும் பிறரைத் துன்புறுத்தக்கூடாது. அனாவசியமாக ஒருவன் பிறருக்குப் பிரியமாயிராத மெய்யை உரைத்தலாகாது. கடுமொழிகள் பேசுவதால், ஒருவனது சுபாவமே கொடுமையாக மாறுகிறது. நாவை அடக்கும் சக்தி ஒருவனுக்கு இல்லாது போயின், அவன் தனது மனநுண்மையை இழக்கிறான். ஒரு நொண்டியைப் பார்த்து, அவன் எப்படி முடமானான் என்று வினவக் கூடாது என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவது வழக்கம்.

ஸ்ரீராமகிருஷ்ணர்.

ஆண்டவனே ஸ்ரீராமகிருஷ்ணராகத் தோன்றினான். இது உண்மையே. பிறருடைய துக்கத்தையும், துன்பத்தையும் போக்கவே ஆண்டவன் அந்த மனித வடிவைப் பெற்றான். தனது நகரில் மாறுவேடத்துடன் செல்லும் அரசனைப்போல உலவினான். பிறர் அவனை இன்னான் என உணர்ந்ததும் அவன் மறைந்துவிட்டான். குருதேவரைச் சரண்புகுந்தால் நீ யாவையும் பெறுவாய். துறவுதான் அவரது பெருமை. நாம் அவர் பெயரைச் சொல்வதும் உண்பதும் அனுபவிப்பதும் அவர் எல்லாவற்றையுமே துறந்து விட்டமையால்தான். சத்தியத்தினிடம் குருதேவருக்குத்தான் எவ்வளவு பற்று, இரும்பு யுகமான இக்கலியுகத்தில் உண்மையைக் கடைப் பிடிப்பதே…