எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு.

வாழ்க்கையில் பணத்துக்கும் சரி, பதவிக்கும் சரி, உணர்ச்சிக்கும் சரி எதற்குமே ஏற்ற தாழ்வு உண்டு. அந்த ஏற்றதாழ்வுகளால் அடியோடு பாதிக்கப்படாதவன் யோகி ஆகிறான். அடியோடு பாதிக்கப்படுபவன் போகி ஆகிறான். அல்லது ரோகி ஆகிறான். சற்று பாதிக்கப் பட்டாலும், சமய சந்தர்ப்பங்களை உத்தேசித்து அவற்றினின்று சட்டென்று விலகிக் கொள்பவன் விவேகி ஆகிறான்.