பலவான்

மனம் எனும் குதிரையின் கடிவாளத்தை விட்டுவிட்டால் குதிரைகள் நம்மை அதன் இஷ்டபடி இழுத்து செல்லும். அதை இழுத்து பிடித்து நிறுத்துபவனே பலவான். மனதின் அலைகளை அடக்கி ஆள்பவனே சாந்தமானவன். வலிமையின் கீழ்நிலை ‍வெளிப்பாடே செயல் அமைதியோ அதன் உயர்நிலை வெளிபாடு. சோம்பலான மந்தநிலையை சத்துவம் என தவறாக எண்ணிவிட கூடாது.

கர்மா செயல்படும் விதம் 3

மனம் சும்மா இருந்தது என்றால் எண்ணங்கள் சிந்தனைகள் இல்லை. எண்ணங்கள் சிந்தனைகள் இல்லையென்றால் செயல்கள் இல்லை, செயல்கள் இல்லையென்றால் கர்மாக்கள் இல்லை. மனிதனிடம் இருக்கும் அற்புதமான பொக்கிஷம் மனம் ஆகும் அதன் வலிமையை, வல்லமையை, எத்தனை பேசினாலும் எத்தனை எழுதினாலும் தீராது. அந்த மனம் இல்லாததை இருப்பதாயும் இருப்பதை இல்லாததாயும் காட்டும் வலிமை உடையது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 18

ஜபம் செய்யுங்காலத்தில் ஆண்டவனின் நாமத்தை உன்னால் இயன்ற அளவு மிக்க அன்போடும், நேர்மையோடும், ஆத்ம சமர்ப்பணத்தோடும் ஜெபித்து வா. நாள்தோறும் தியானம் செய்வதற்கு, முன் இவ்வுலகில் உனது திக்கற்ற நிலை‍யை எண்ணிப் பார், இதன் பின் உன் குருநாதர் கூறிய முறையில் சாதனை செய்யச் தொடங்கு. ஞானப் பயிற்சி முறைகளால் பூர்வ கர்மத் தளைகள் அறுக்கப்படுகின்றன. ஆனால் பிரேமபக்தியின்றிக் கடவுள் தரிசனம் பெறுதல் என்பது முடியாத காரியம். ஜபம் ஞான சாதனை இவற்றின் உண்மை நோக்கம் என்னவென்று…