வன்முறை-அமைதி

வன்முறையால் ஏற்படும் அமைதி மிக குரூரமானது. அது அடிபட்ட நாகம், புதரில் பதுங்கிய புலி தோப்புக்கு நடுவே யானை, கிணற்றுக்குள் உறங்கி கிடக்கும் வாயு விரிசல் விட்டு கீழே விழ காத்திருக்கும் கோபுர கலசம் சாம்பல் கக்கும் எரிமலை, வெளியே தெரியாமல் தனக்குள் முணுமுணுக்கும் பூகம்பம், குடும்பத்தில் இந்த சூழ்நிலை இருந்தால் உடனே கவனித்து சரி செய்யப்படவேண்டும் இல்லாவிட்டால் குடும்பம் சீர்குலைந்துவிடும்