சுந்தர யோக சிகிச்சை முறை 3

இயற்கைக்கு விரோதமான செயலால் உண்டாகாததோர் தன்மை. இத்தகைய சுகம், இயற்கை ஆரோக்கியமான தூண்டுதலால் தோன்றி இயற்கை ஆரோக்கியத்தை நிலை நிறுத்தி, மனிதனை பகுத்தறிவு மனிதனாக வாழச் செய்து தன் அடிப்படையான தெய்வீகத் தன்மையை விளக்கி, அத் தெய்வீகமாக நின்று பரவி ஒளிறச் செய்வதேயாகும். இந்த சுகம், உடல் நலன், இயற்கை ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டது. இதை மீறியதாக ஆகாது. மீறியதால் ஏற்படுதலாகாது

நாம் அடைய நினைப்பது

நாம் தெரிய நினைப்பதும், நாம் அடைய நினைப்பதும் முயற்சிக்காமல் கிடைக்காது. முயற்ச்சி தொடர்ந்து வரவேண்டும். அதற்க்கு வைராக்கியம் தேவைப்படுகிறது. அந்த வைராக்கியம் கைவர பெற்றால் முயற்ச்சி என்பது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும் அப்படி முயற்ச்சி தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கும்போது நாம் அறிய நினைப்பது அடையநினைப்பது நமக்கு கைகூடும். அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி அதாவது பணம், பதவி, மண், பெண், பொன், தெய்வீகம் போன்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் நமக்கு தொடர்ந்த முயற்ச்சியும் அதை…