உரையாடலின் ஒரு பகுதி  100

ப்ருத்ருஹரியின் நீதி சதகம் அஞ, ___ஸூகமாராத்ய ஸீகதரமாராத்யதே விஷேச- ஞானலவ _துரீவிதக்தம் ப்ரும்மாபி நரம் ந ரஞ்சயதி.. இதன் பொருள் – அறியாதவனை எளிதில் திருப்தி செய்து விடலாம் அறிந்தவனை அதை விட எளிதில் திருப்தி செய்து விடலாம் மிக குறைவாகவே அறிந்து எல்லாவற்றையும் அறிந்து விட்டவன் போல் நினைத்துக் கொண்டிருப்பவனை ப்ரம்மனாலும் திருப்தி செய்ய முடியாது.

உரையாடலின் ஒரு பகுதி  99

ஒரு தடவை சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் மனதளவில் இறந்து போக தொடங்கினால் அதற்கு பிறகு அந்த மரணம் ஒரே அடியாய் நிகழாது நிற்கவும் நிற்காது.

உரையாடலின் ஒரு பகுதி 98

எந்த விஷயங்களையும் பிராக்டிக்கலாக யோசித்து பார்க்க வேண்டும் உணர்வுகள், உணர்ச்சிகள், கற்பனைகள் அவற்றுக்கு என்ன அவைகள் எப்போதும் நன்றாக தான் இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்படி எப்பொழுது என்பது தான் முக்கியம்.

உரையாடலின் ஒரு பகுதி  97

காதல் என்றால் உலகத்தையே மறந்து விடுவது அல்ல இந்த உலகில் எப்படி வாழுவது என்று ஆழமான யோசிப்பதுதான் காதல். மதித்தல் – காதல் பகிர்தல் – காமம் இவை இரண்டும் சரியான விகிதாச்சாரத்தில் கிடைத்தவர்கள் (இருபுறமும்) ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்டசாலிகள்.

உரையாடலின் ஒரு பகுதி  96

எதுவும் மறக்குமா ஆமாம் மறக்கும் அதுக்கு நிறைய வாய்ப்பு இருக்கு எதையும் மறக்காம இருக்கத்தான் வாய்ப்பு ரொம்ப கம்மி.   எப்படி சொல்ற, 8 வயசுல ஆசைப் பட்டது 12 வயசுல மறந்தே போச்சு, 15 வயசுல ஆசைப்பது 25 வயசுல தேவையேயில்லைன்னு போச்சு இது எனக்கு மட்டுமல்ல உனக்கும் தான் ஊருல உலகத்துல இருக்குற எல்லாத்துக்கும் தான் நாம வளர வளர தேவையின்மை, நேரமின்மை, பிடித்தமின்மை அப்படின்னு நிறைய வரும் அப்போ எதுவும் மறக்கும் எல்லாம்…

உரையாடலின் ஒரு பகுதி  95

அதிசயமான விஷயம் அல்லது அவலமான விஷயம் எதுவென்றால் ஒரு காலத்தில் தான் செய்த அல்லது தான் இப்போதும் செய்து கொண்டிருக்கிற கீழ் தரமான செயல்களை அடுத்தவர்கள் செய்தால் எத்தனை அறிவுரைகள் அல்லது வசவுகள்

உரையாடலின் ஒரு பகுதி  94

இயலாமைக்கும் அப்பாவி தனத்திற்கும்  உள்ள வித்தியாசம் மிக மெல்லியது இதை தெரிந்து கொள்ள கொஞ்சமாவது தன்னைப் பற்றி சிந்திக்கும் அல்லது தன்னை பார்க்கும் பழக்கம் உடையவர்களால் மட்டுமே முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  93

வாழப்போகும் சொற்ப காலத்தில் சாத்தியமான வரையில் அனுபவங்களை பெற்றுவிட வேண்டும் என்று தவிக்கும் மனிதர்கள் ஆத்ம வஞ்சனை செய்து கொள்வது வேடிக்கைதான். சில பேர்களுக்கு வேலையில்லை பலபேர்களுக்கு தன்னைப் பற்றியும் தன்னுடைய நிலை பற்றியும் தர்க்க ரீதியில் யோசிக்கும் பழக்கம் இருப்பது இல்லை.

உரையாடலின் ஒரு பகுதி  92

ஒரு மனிதன் தவறான வழியில் போகாமல் இருப்பதற்க்கு காரணம் அவனின் தனித்தன்மை என்று மட்டும் சொல்லிவிட முடியாது அவனுடைய கோழைத்தனமும் காரணமாய் இருக்கக்கூடும். தனித்தன்மை என்பதை இந்த கோணத்திலும் பார்த்து புரிந்துகொள்ள வேண்டும்

உரையாடலின் ஒரு பகுதி  91

அறிவின் முடிந்த பயன் எல்லா உயிர்களையும் அதனதன் நிலையில் சமமாய் பாவித்து எல்லா உயிர்களும் எங்கும் எப்போதும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என நினைப்பதுதான்.

உரையாடலின் ஒரு பகுதி  90

கோபமூட்டத்தக்க வெம்மையான அனுபவங்களில் இருந்து கவலைபடத்தக்க துக்க நிகழ்ச்சிகள் வரை எல்லாவற்றிலும் வெம்பி, வெம்பி இறுதியில் உணர்ச்சிகளே இல்லாத நிலைக்கு நகர்ந்து அங்கு நின்று சுயமாய் ஒளிர பழகிக் கொள்ள வேண்டும்.

சனி 21

சனியும், சந்திரனும் கூடி ரிஷப ராசியில் அமைந்தால் இளவயதிலேயே கல்யாணம் நடக்க வாய்ப்புண்டு. சனி பகவான் லக்னத்தையோ சந்திரனையோ பார்த்தால் விவாகம் மிகவும் தாமதமாக நடைபெறும். சனி கிரகம் லக்னத்தில் 1ல் அமர்ந்தால் சச மஹாயோகம் ஏற்படும்.  பலரால் பாராட்டப் படுவர், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுளுடன் பெரும் புகழுடன் வாழ்வர்.

சனி 20

சனி, 3ம் பார்வையாகவோ, 10ம் பார்வையாகவோ, 7ம் பார்வையாகவோ சுக்கிரனைப் பார்ப்பின் சன்யாஸ வாழ்க்கை அமையும். சனியும்,  சந்திரனும் இணைந்தால் அசையாத சொத்துக்கள் உண்டு.  நிறைய ஏவலாட்கள் உண்டு. சனி பொதுவாக ராகு, கேது, சூரியனைப்பார்ப்பது பிதுர்தோஷமாகும்.

சனி 19

சனி 4வது வீட்டில் இருந்து 4வது வீடு துலாம், மகரம், கும்பமாக இருப்பின் ஜாதகர், ஜோதிடர், கணித ஆசிரியர், அகெளண்ட்ஸில் வேலை பார்ப்பவராக இருப்பார். சனி, ராகு சம்பந்தம், புதன், ராகு சேர்க்கை எலக்ட்ரனிக் கல்வியில் சிறந்து விளங்குவர். சனி லக்னத்திலிருந்தோ, சந்திரனிடமிருந்தோ 5ம் வீடு, 10 வீட்டில் இருப்பினும் பிரம்மச்சரிய யோகம் ஏற்படும்.

சனி 18

சனி 7ல் இருந்து பாபகிரஹங்களால் பார்க்கப்பட்டால் அவருக்கு இருதாரம் ஏற்படும்.  சனி, புதன் சேர்க்கை 7ம் வீட்டில் இருப்பின் விதவையை மணப்பர். அதேபோல் சந்திரன், சனி சேர்க்கை 7ல் இருப்பின் விதவையை மணந்து சுகமாக வாழ்வர். சனி ஜன்ம ராசிக்கு கோச்சாரப்படி 12ம் வீடு, 1,2 ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை ஏழரை ஆண்டு சனி அல்லது சாடே சாத்தி அல்லது ஏழரை சனி என்று கூறுவர். சனி பகவான் லக்னத்தைப்பார்த்தாலோ, அல்லது லக்னாதிபதியை பார்த்தாலோ, 10மிடத்தை…

சனி 17

சனி 2ல் இருப்பின் இரண்டு முறை திருமணம் ஏற்படும். 7ல் இருப்பின் இருதாரயோகம் 12ல் இருப்பின் பார்வைகோளாறுடன் போராட வேண்டிவரும். சனி, சூரியன் இணைந்து லக்னத்திலோ, 7ம் வீட்டிலோ இருப்பின் திருமணம் நடப்பது துர்பலம், திருமணமே ஆகாமல் போகலாம். சனி, குரு இணைந்து லக்னத்தில் இருந்தால் பண நெருக்கடியும், திடீர்வேலையினால் பாதிப்பும், வழக்கு வியாஜ்யத்தில் ஈடுபடுதல் போன்றவை ஏற்படும்.

விடுபட எண்ணுகையில் கொஞ்சம் தீனிகேட்டு எழுந்திருக்கும் புத்தி கரையான் புற்று போல வளரத் தொடங்கிவிடும் நீங்களாக அதற்கொரு பூச்சிக்கொல்லி மருந்து அடித்துக் கலைக்கும் வரை உங்கள் பேச்சு அதன் பேச்சுடன் ஒத்துப்போகும் கவனித்துப் பாருங்களேன்.. பின் குறிப்பு எதில் இருந்து விடுபடஎன்பது அவரவர் சம்பத்தப்பட்ட விஷயம்

காத்திருப்பது

காத்திருப்பது  வீண் சில சமயம் தோணும்போதும்  மனம் காத்திருக்க தவறியதில்லை,  காத்திருப்பு  உனக்காக  என்ற போதிலே;  ஏதோ  ஒரு நம்பிக்கையில்..  பாரமான  உன் நினைவோடு  என்றென்றும்..   பின் குறிப்பு உனக்கு என்பதை எதை கொண்டு நினைத்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் தரம் உங்களுக்கு தெரியும் அடுத்தவர்களுக்கும் தெரியும்

உங்களிடம் நீங்கள்

உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கேள்வி… நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே.. ஏனெனில் உங்களிடம் இருப்பது நேரம் ஒன்று தான்.

பழ மொழிகள் 10

குருடனுடன் சென்றாலும் குறும்புக்காரனுடன் செல்லாதே. கிழட்டுத் தேனீக்கள் தேன் தராது. கையிலே காசும் இல்லை, முகத்திலே களையும் இல்லை. சோம்பேறிக்குச் சோளம் தான் வெள்ளாமை. தாய் சொல் கேளாத பிள்ளை தறுதலை

பழ மொழிகள் 9

ஒட்டை மணியானாலும் ஒசை நீங்குமா? கடன் வாங்குகிறவன் கவலையும் சேர்த்து வாங்குகிறான். கட்டுப் பாடற்றவன் கௌரவம் இழப்பான். கசப்பு மாத்திரை தான் பிணி தீர்க்கும். காலம் அறிந்து கடமையை ஆற்று.

பழ மொழிகள் 8

கைத்திறன் இல்லையேல் பிழைப்பு இல்லை. கல்வி கரையில, கற்பவர் நாள் சில. மனசாட்சி இல்லாதவன் ஒன்றும் இல்லாதவன். பட்டவரைக்கும் பலன் உண்டு. முன் ஏர் போன வழியே பின் ஏர் போகும்.

பழ மொழிகள் 7

நகமும் சதையும் போல் வாழ்க்கை. மாதா செய்த பாவம் மக்கள் தலையில். கொடுப்பதற்கும், சேமிப்பதற்கும் அறிவு வேண்டும். முட்டிக் கொள்ளும் முன்பே குனிய வேண்டும். எல்லையற்ற உற்சாகம் தீமை பயக்கும்.

வெற்றிகளை சத்தித்தவனின் இதயம்

வெற்றிகளை சந்தித்தவனின் இதயம் பூவை போல் மென்மையானது தோல்வி மட்டுமே சந்தித்தவனின் இதயம் இரும்பை விட வலிமையானது – விவேகானந்தர் நீ பட்ட துன்பத்தை விட அதில் நீ பெற்ற அனுபவமே சிறந்தது விவேகானந்தர் தன்னை அறிந்தவன் ஆசைபட மாட்டான் உலகை அறிந்தவன் கோவபட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன்  துன்பபடமாட்டான்

கோபம் என்பது

கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு , உனக்கு நீயே  கொடுத்து கொள்ளும் தண்டனை புத்தர் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவது இல்லை!!! – காரல் மாக்ஸ் வெற்றி இல்லாமல் வாழ்கை இல்லை, வெற்றி மட்டுமே வாழ்கை இல்லை,  

நாம மேல ஏற ஏற

நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால் , ‘தன்னடக்கம்’ என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!! லாரியில அழுது கொண்டே சென்றது…. ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்…….!!!

கார்ட்டூன் சேனலில் இருந்து

கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!! பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!! பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்…

நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள்

நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- நம்மகிட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..! எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..! எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை உண்டு…!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்…!!! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.