சனி 16

சனி, சந்திரனும் சமசப்தமாக இருப்பின் திருமணம் நடைபெறுவதற்கு பலபிரச்சனைகள் உண்டாகும்.  திருமணம் தாமதமாகும்.  ( ஸ்ரீ கிருஷ்ணன் ) . சனிக்கு 2,12ல் ராகு இருந்தால் 28 வயதில் திருமணம் நடைபெறும். நல்ல செல்வ சேர்க்கை ஏற்படும். லக்னம், சூரியன், சந்திரன், புதன் ஒன்றக்கொன்று 7\7 ஆக அமைவது இருவரும் கருத்தொருமித்து வாழ்வர். சனி 2 வது வீட்டில் உச்சத்தில் இருப்பின், ஜாதகர் ஆட்களை வைத்து வேலைகள் செய்வித்து நிறைய சம்பாதிப்பர், இரும்பு, கற்கள், உழுவுத்தொழிலில், பெரும்பணம்…

சனி 15

சனியுடன், சுக்கிரன், ராகு, புதனுடன் சேர்ந்து 7ம் வீட்டில் இருப்பின் திருமணம் தாமதமாக ஏற்படும். சனி 2ல் செவ்வாய் 7ல் சுக்கிரனுக்கு 12ல் செவ்வாய் இருப்பின் இவ்வமைப்பு திருமணமாகாத நிலமை ஏற்படுத்திவிடும். சனி, புதன், லக்னாதிபதி இவர்களுக்கு 6மிடம் சம்பந்தம் ஏற்பட்டால் சேர்க்கை, பார்வை பெற்றால், வழக்கு, வியாஜ்ஜித்தில் திசா, புத்தி காலங்களில் ஈடுபடுவர்.

சனி 14

சனி மகர லக்னகாரர்களுக்கு மாடமாளிகைகளை வழங்குவார். சொத்துக்களை சேர்த்து வைத்து வழி வகுப்பார். சனி  7 ம் மிடத்தை பார்ப்பதினால் பொருள் களவு போகும், அக்னிபயம் கொடுத்த  பொருளைத் திரும்பி வாங்க இயலாமல் போகும் தனநாசம், மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் சுகம் இராது. சனிக்கு கேந்திர, திரிகோணங்களில் புதன், சுக்கிரன், கேது நின்றால் யோகம் ஏற்படும்.

சனி 13

சனியை லக்னமாக உடையவர்கள் சற்று மந்தகுணம் உடையவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பர், நிதானம், பிரதானமாக இருப்பர். சனி, செவ்வாய் 7ல் இருந்து 7க்குடையவன் செவ்வாய் வீட்டில் இருப்பின் அவன் மனைவி பிற ஆடவருடன் தொடர்பு கொள்வாள். சனியினால் மகர லக்னக்காரகர்கள் பெறுகின்ற வருவாய், புகழ் அனைத்துச் சிறப்புகளும் அடிப்படை கடும் உழைப்பாகவே இருக்கும், மற்றவரின் நலத்துக்காக தம் உடலையும், மனத்தையும் வருத்திக்கொண்டு பிறர் அடைகிற சுகத்தை கண்டு உள்ளம் பூரிப்பார்கள்.

சனி 12

சனிக்கு 7ல் சுக்கிரன் இருந்தால் அவனுக்கு களத்திரத்தால் துக்கம் சம்பவிக்கும். சனி – 4ல் அமர்ந்து செவ்வாய் பார்த்தால் துர்மரணம் ஏற்படலாம். சனி செவ்வாய் கூடி 6மிடத்தில் இருக்க சூரியனாவது, ராகுவாவது பார்த்தால் ஜாதகர் எப்போதும் நோயாளியாகவே இருப்பர். சனி 9மிடத்தில் பலமாக இருந்தால் வேதாந்த அறிவு, ஜோதிடம் போன்றகளைகளில் திறமை ஏற்படும். சனி துலாத்தில் அமர்ந்து உச்சமாகி இருப்பின், அவர் மருத்துவ துறையில் மருத்துவராகவோ அல்லது ஒரு மருந்துக்கடை வைத்தோ பணமீட்டுவர்.

சனி 11

சனி எவ்வளவு சுப பலம் பெற்றிருந்தாலும் அவருக்கே உரிய மந்தகதியால் பலன்களை மெள்ள மெள்ளத்தான் கொடுப்பார்.  வேகம் அவரிடம் கிடையாது. சனியும், சூரியனும் ஒன்றுகூடி இருந்தால் அறிவாளியாக, சுறுசுறுப்புடனும், அனுபவசாலியாகவும், உலோகங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் நிபுணராவார். சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் இருந்தால் யுத்தமும், சத்தமும் இல்லத்தில் அதிகரிக்கும்.

யோசிக்க 5  

பொருளாதார விடுதலை: நாட்டின் பொருளாதாரத்தை சோஷலிச கட்டுபாட்டுத் தளைகள் சிலவற்றில் இருந்து விடுவித்து குறைந்தளவு தாராளமயமாக்கம், நமக்கு 7 முதல் 9 சதவிகிதம் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி பெறும் நிலையைக் கடந்த 20 வருடங்களில் ஏற்படுத்தியுள்ளது. அவசியத் தேவையாக இன்னும் கூடுதலான தாராளமயமாக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், அரசாங்கத்தின் பொருளாதார ஆட்சிமுறைகளில் முன்னேற்றம் காணாமல், முழு தாரளமயமாக்கம்கூட வளர்ச்சியை நீடிக்கப் போதுமானதாக இருக்காது.

யோசிக்க 4

 மேலும், சுமார் 30 லட்சம் வழக்குகள் உயர்நீதி மன்றங்களிலும், மனத்தை மரத்துப் போகச் செய்யும் அளவில் சுமார் 2 கோடியே 20 லட்சம் வழக்குகள் மீதியுள்ள நீதிமன்றகளிலும் நிலுவையில் உள்ளன. இவ்வளவு ஏன், உயர்நீதிமன்றங்களில் 1950ல் பதிவு செய்யப்பட்ட வழக்குகள்கூட இன்றும் உள்ளன. தாமதாக நீதி கிடைப்பது நீதி மறுக்கப்பட்டதற்குச் சமம் என்ற ஆழமான கவலை ஒருபுறம் என்றாலும், வழக்குகளின் தேக்கம் வியாபாரத் துறையின் மீதும் கேடான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த முடியாதபோது , நடந்தேறும்…

யோசிக்க 3 

ஆட்சிமுறை அமைப்பின் அங்கங்களாக இருப்பது சட்டமன்றம், ஆட்சி நிர்வாகம், நீதிமன்ற அமைப்பு ஆகியவை. சட்டங்களை இயற்ற சட்டமன்றமும், சட்டங்களை செயல்படுத்த அதிகாரவர்க்கத்தை உள்ளடக்கியதாக நிர்வாகமும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களும் உள்ளன. இப்போது இருக்கும் நீதிமன்ற அமைப்பின் குறைபாட்டுப் புள்ளிவிவரங்கள் நிலைதடுமாற வைப்பவை. இருபதாயிரத்துக்கும் மேலான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

யோசிக்க 2

 பொருட்களையும், சேவைகளையும் உற்பத்தி செய்ய எடுத்த முயற்சிகளில் போதிய திறனோடு செய்ய முடியாமல் அரசாங்கம் அடைந்த தோல்விகள் ஏராளம். அதற்கு இணையான அல்லது அதைவிட பெரிய தோல்வியும் ஒன்று உண்டு. அது, அரசாங்கம் செய்யாமல் விட்ட காரியங்களால் ஏற்பட்ட தோல்வி. நீதிமன்ற அமைப்பின் செயல்பாட்டை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

யோசிக்க 1

தனக்கு ஒப்புமை அனுகூலமோ, போட்டியிடும் திறனோ இல்லாத    நடவடிக்கைகளில் தனது சக்தியை விரயம் செய்ததால், அரசாங்கம் தான் கட்டாயம் செய்ய வேண்டிய விஷயங்களை அலட்சியம் செய்துவிட்டது. சட்ட வடிவமைப்பு மற்றும் அமலாக்கம், ஒப்பந்தங்கள் ஏற்படவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் தேவையான சூழல் ஆகியவற்றை உருவாக்குவதில் கோட்டை விட்டது.

இந்த உலகம் உங்களை ஒரு போதும்

சமன்பாடு 1×9=7 2×9=18      3×9=27     4×9=36   5×9=45    6×9=54    7×9=63        8×9=72   9×9=81      10×9=90 மேலே உள்ள சமன்பாடு ஆசிரியை ஒருவரால் கரும்பலகையில் எழுதப்பட்டது. இந்த சமன்பாடு எழுத ஆரம்பிதது முதல் வகுப்பறை முழுவதும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டிருந்தது. காரணம் முதலாவது சமன்பாடு பிழையாக எழுதப்பட்டிருந்தது. மாணவர்களைச் சிரிக்கத் தூண்டியது. சமன்பாட்டை எழுதி முடித்து மாணவர்களை நோக்கிய ஆசிரியை சிறிது நேரம் அமைதியாக…

அடமானமாய் என்ன தருவீங்க…?”

வங்கி மேலாளரிம் அன்று ஒரு ஆதிவாசி ஆள் லோன் கேட்டு வந்தார். மேலாளர் லோன் அப்ளிகேஷனை எடுத்து கையில் வைத்துக் கொண்டு கேட்டார். “எதுக்காகப் பணம் வேணும்…?” கொஞ்சம் மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்…!” அடமானமாய் என்ன தருவீங்க…?” ஆதிவாசி ஆள் லேசாய் குழப்பத்துடன் கேட்டார். “அடமானம்னா என்ன…?”. நீங்க கேக்கற பணத்தோட மதிப்புக்கு சமமா ஏதாவது சொத்து கொடுத்தாத் தான் பேங்க் பணம் கொடுக்கும். அதைத்தான் அடமானம்னு சொல்லுவோம்!” ஆதிவாசி ஆள் சொன்னார்.…

தொடர்ச்சியான உழைப்பு மட்டுமே

மீன் பிடிப்பவன் ஒருவன் கையில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியுடன் ஒரு குளக் கரையில் நின்று கொண்டிருப்பதை ஒருவன் பார்த்தான். அவன் கண்ணாடியை வைத்து என்ன செய்கிறான் என்று வினவினான் அதற்கு மீன் பிடிப்பவன் தான் கண்ணாடி கொண்டு மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான். மேலும் இது ஒரு புதிய வழி முறை என்றும் இது கொண்டு தான் பெரும் செல்வம் சேர்க்கப் போவதாகவும் கூறினான். அது எப்படி செயல் படுகிறது?” என்று கேட்டான். சொல்கிறேன். ஆனால்…

ஏசு நடந்து தான் சென்றிருப்பார்

இந்த தொகை மிகவும் அதிகம் ஒரு ஏரியில் படகுச் சவாரி நடந்து கொண்டிருந்தது. இந்த மனிதருக்கு படகுச்சவாரி செய்ய ஆசை. படகுச்சவாரி செல்ல எவ்வளவு பணம் தர வேண்டும்?” என்று ஒரு படகோட்டியிடம் கேட்டார். இருபது டாலர்” என்று அவன் சொன்னான். இந்த தொகை மிகவும் அதிகம்” என்று வாதிட்டார் நம்ம ஆள். அய்யா, இந்த ஏரி மிகவும் புகழ் பெற்றது என்பதை மறந்து விடாதீர்கள்” என்றான் படகோட்டி. நீ என்ன சொன்னாலும்நீ கேட்கும் பணம் அதிகம்…

ரசிக்கும் வாழ்க்கை

குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை” என்றான் சீடன் ஒருவன். குரு அவனை ஒரு தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.  இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா, என்று குரு அவனிடம் சொன்னார். அவன் பட்டாம்பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். ஆனால் அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை. பரவாயில்லை வா நாம் இந்த தோட்டத்தின் அழகை ரசிக்கலாம் என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். இருவரும் அங்கு அமைதியாக…

பழ மொழிகள் 5

பழமொழிகள் அனுபவத்தின் குழந்தைகள். நோயின் தந்தை யாரோ, தவறான உணவு தான் அதன் தாய். பேச்சில் தங்கம், கொடுப்பது செம்பு. மற்றவர்களைக் கீழே தள்ளிவிட்டு நீ ஏணியில் ஏறமுடியாது. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்.

பழ மொழிகள் 4

அமைதியான மனத்திற்குப் பார்ப்பதெல்லாம் விருந்து. மூட நம்பிக்கைக்கு மருந்தில்லை. பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை, நீ பெறுவது பேரின்பம். கோபத்திற்கு கண்ணில்லை. கற்பனைப் பேய்களைத் தவிர வேறு பேய்களில்லை.

பழ மொழிகள் 3

காவி உடுத்தாலும் கவலை போகாது. கொடுப்பதை பிறர் அறியாது கொடு. உனக்குக் கொஞ்சம் எனக்குக் கொஞ்சம் இதுதான் நட்பு. முட்டாள் கடைசியாகச் செய்வதை அறிவாளி முதலில் செய்கிறான். வளைகிற முள் நுழையாது.

பழ மொழிகள் 2

கண்ணில் கண்டைதையெல்லாம் வாங்க துடிக்காதே. கணக்குப் பார்த்து செலவிடு. கண்ணால் கண்டதை மனதால் யோசி. கேளாமல் உதவி செய். தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.

பழ மொழிகள் 1

மலை இலக்கானால் குருடனும் எய்வான். சிறிய மனிதரிடத்தில் பெரிய உள்ளம் இருக்கலாம். பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது. காட்டு விலங்கை வீட்டில் வளர்க்காதே. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை.

உரையாடலின் ஒரு பகுதி 83

அந்த திரைகள் ஆணவம், கன்மம், மாயை இதன் உப பிரிவுகளாக வருவது காம, குரோத, மோக, மத மாச்சர்யம், அன்பு, பாசம், நேசம், பரிவு, தியாகம், இரக்கம் போன்றவை இவை அனைத்தும் மனதில் திரைகளாக இருக்கும் வரை அறிவு மனதில் முடங்கியே இருக்கிறது. சொல்லப்போனால் அந்த அறிவு சூரியன் இருட்டிலேயே இருக்கிறது இதுவும் முரண்பாடான வாக்கியமே ஆனால் புரிந்து கொண்டால் புரியும் ரொம்ப சுலபமாய் இயல்பாய் சொல்வது என்றால் அவரவர் ஆன்மாவை அறியாத அறிவு அறிவேயல்ல என்பது…

உரையாடலின் ஒரு பகுதி  82

 இயற்கை என்று நாம் அழைக்கக்கூடிய மகா சக்திகளான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அண்டம், பேரண்டம் போன்ற அனைத்துமே மனதில் இருக்கும் அறிவு கொண்டு அறிவதே ஞானம் அது உச்சம் தொடும் போது ஆன்மாவை அறிந்ததாகிறது. அந்த அறிவே பிரபஞ்ச பேரண்ட அறிவாகிறது. இந்த அறிவை நாம் அடைய அறிய முடியாமல் பல திரைகள் நம் மனதை போர்த்தியிருக்கிறது.

உரையாடலின் ஒரு பகுதி  81

நம் முன்னோர்கள் சொன்னது தான் அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் உள்ளது என்று, இது மிக மிக சத்தியமான வார்த்தை மனம் என்ற ஒன்று இல்லையென்றால் புறத்தில் இருக்கும் எதுவும் நமக்கு தெரியாது, புரியாது அதாவது நம் மனதிற்குள் இருப்பது எதுவும் தெரியாது. அதனால், நாம் கண்டிப்பாக திடமான முடிவுக்கு தாராளமாய் வந்துவிடலாம் புறப்பொருட்கள் அனைத்தும் நம் மனதை நாம் அறிய இன்னும் சரியாய் சொல்ல போனால் நம்மை நாம் அறிய உதவும் பொருட்களேயன்றி வேறு ஒன்றும் இல்லை…

உரையாடலின் ஒரு பகுதி  80

எல்லாம் நம் மனதில் இருப்பதே அப்படி இருப்பதை வெளி கொணர உண்டான சாதனமே. மனம் புறம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அது ஆதவனாகட்டும் அல்லது அடுப்படி ஆகட்டும் ஆதவனின் உதயம் மனதிற்கு தரும் உணர்வு, அடுப்பு எனும் புறப்பொருள்.  நம் மனதிற்கு தரும் உணர்வு இரண்டும் ஒன்றா என்று யோசித்தால் இல்லையென்ற பதிலே வரும் அப்படியானால் அந்த புறப்பொருள் மூலம் நாம் அடைந்த உணர்வு அகத்தில் என்பது புரியும் அதில் கவனம் செலுத்தி பார்க்கும் போது காலப் போக்கில்…

உரையாடலின் ஒரு பகுதி  79

அறிந்து கொள்வது அறிவெனப்படுவது அந்த அறிவானது புறம் சார்ந்த விஷயங்கள் மூலம் அகம் சார்ந்த நிலைக்கு வருகிறது. அதாவது புறத்தில் பயணம் மேற்கொண்டு அகத்தில் பயணத்தை நிறைவு செய்கிறோம். ஆனால் எல்லா மனிதர்களும் அப்படிப்பட்ட பயணத்தை நிறைவு செய்வதில்லை. புறத்திலேயே பல பேருடைய பயணங்கள் நிறைவு பெற்று விடுகிறது.

உரையாடலின் ஒரு பகுதி  78

சரி இதை இப்படியே விட்டு பதிவுகளை கொண்டுள்ள மனதை பார்ப்போம். மனம் உண்மையிலேயே அண்ட சராசரங்கள் அனைத்தையும் உள் அடக்கியது அதாவது வெளியில் இருப்பது எல்லாம் உள்ளிருக்கிறது மாற்றி சொன்னால் உள்ளிருப்பது மட்டுமே வெளியில் இருக்கிறது. இது புரிந்து கொள்ள முயலும் போது முரண்பாடாகவே தோன்றும் புரியும் போது சமன்பாடு தான் என்பது தெளிவாகும்.

உரையாடலின் ஒரு பகுதி  77

அப்படி ஒத்துழைத்தால் மட்டுமே நம்மால் இன்ப துன்பமென்ற ஆசிரியரிடம் கற்று அதன் வழியே குருவிடம் வரும் போது அனுபவத்தின் மூலம் நாம் அதை கண்டு உணர்ந்து கொள்ளலாம் வேறு வழி_ இருப்பதாக தெரியவில்லை. சரியாக சிந்தித்தால் இன்ப துன்பங்களால் உண்டான அனுபவபதிவே குண இயல்புகளாக மாறுகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும்.

உரையாடலின் ஒரு பகுதி  76

அதாவது அறிவானை அறியும் போது அறியப்படுபவன் அறிவானாகவே ஆகிறான். தன்னை அறியும் உபாயம் அறிந்து தன்னை அறியும் யாரும், தன் தலைவனையும் அறிந்து விடுகிறார்கள். அவர் அப்போது பிரபஞ்ச அறிவு உடையவராகின்றனர். இது பள்ளியில் கிடைக்காது இது கூவி, கூவி விற்கப்படும் பொருளும் அல்ல, இதை அடைய   நம் முந்தய வினையும் ஒத்துழைக்க வேண்டும்.   

உரையாடலின் ஒரு பகுதி  75

 அதுவும் நிரந்தரமாக இது கேட்பதற்கும், படிப்பதற்கும் புரியாதது போலவும், புதிரானது போலவும் இருந்தாலும் உண்மை இதுதான். படிப்பினையே ஒரு மனிதனை புடமிடுகிறது. அந்த படிப்பினை இந்த உலகத்தில் இன்பம், துன்பமாக இருக்கிறது. அவரவர் வினை விதிப்படி இன்ப, துன்ப என்ற ஆசிரியர்கள் மூலம் வெறும் சாதாரண அறிவானது ஒரு கால கட்டத்தில் பிரபஞ்ச அறிவாக மாறுகிறது.

 உரையாடலின் ஒரு பகுதி  74

ஒரு மனிதனின் லட்சியமே இந்த பிரபஞ்ச அறிவை பெறுவது தான் அதற்கு மனிதன் தற்போது தான் கொண்டுள்ள அறிவை எல்லாம் முழுக்க, இழக்க வேண்டியது மிக அவசியமாகிறது. தற்போது, மனிதன் கொண்டுள்ள அறிவினால் அழிவும் அனர்த்தமுமே விளையும், விளைகிறது. ஆனால், பிரபஞ்ச அறிவை கொண்ட மனிதன் அன்பும் ஆனந்தமும் இன்பமும் உடையவனாகவே இருக்கிறான்.