உன்னிடமே கேட்டுப் பார்த்துக்கிட்டியா 1

அந்த மனிதருக்குப் பெரிய கனவு இருந்தது. ஆனால், அந்த மனிதர் ஒரு கட்டத்தில் தன் கனவு நனவாகும் என்கிற நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். தன் கனவை அடையத் தன்னிடம் போதுமான பலம் இல்லை என்று கருதினார். யாரிடமாவது உதவி கேட்க வேண்டும் என்றும் அவருக்குத் தோன்றியது. முதலில் அந்த மனிதருக்கு நினைவுக்கு வந்தது வயதான அவருடைய அம்மா. அவரிடம் கேட்டுவிடுவது என்று முடிவெடுத்தார். அந்தக் கனவை நனவாக்குறதுக்கான பலம் என்கிட்ட இல்லைனு தோணுது. அதுக்கான சக்தியை…

முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே 2

மன்னருக்கு ஆத்திரம் வந்தது. “நானே புலியை வீழ்த்தியிருப்பேன். உன்னை யார் அம்பு விடச் சொன்னது?” என்று கோபமாகக் கேட்டார். இல்லை மன்னா, அந்தப் புலி உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொல்லப் பார்த்தது…” என்று வேடன் முடிப்பதற்குள் மன்னர் குறுக்கிட்டார். இதற்கு மேல் எதுவும் பேசாதே” என்று கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் மன்னர். மறுநாளே வேடன் கைது செய்யப்பட்டார். மந்திரியும் வேடனும் அருகருகே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மந்திரி வேடனிடம் பேசி, அவர்…

 முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே  1

ஒரு அரசன் யார் பேச்சையும் கேட்காத, தலைக்கனம் பிடித்தவர். ஒரு நாள் அரசவையில், “மந்திரி, நான் வேட்டைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றார். நல்லது மன்னா, நான் நமது வீரர்களைத் தயார் படுத்துகிறேன்.” எதுக்கு? நான் ஒருவனே பெரும் படைக்குச் சமமானவன் தானே?” மன்னரின் பெருமைப் பேச்சைப் புத்திசாலித்தனமாகத் தான் சமாளிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த மந்திரி தொடர்ந்தார் . “உண்மைதான் மன்னா. மிகப் பெரிய மனிதப் படையைத் தாங்கள் ஒருவரே வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆனால், விலங்குகள்…

நான் இங்கு வெறும் பிரதிநிதி   2

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான். அது கிடக்கட்டும்” என்ற ஞானி “நீ இப்போது எப்படி இருக்கிறாய்” என்று கேட்டார். நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்” முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா???” இல்லை அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்?? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்???”” விழித்தான்…

கதை 18  நான் இங்கு வெறும் பிரதிநிதி  1

ஒரு அரசன், ஞானியிடம் “என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை” என்றான். உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா.?” என்று ஞானி கேட்டார். என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை” என்றான். அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு”…

கதை 17ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்

முன்பு ஒரு நாடு பிளவுபட்டிருந்த போது அதன் தலைநகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது. ஒருநாள் கிழக்கு பகுதியை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டு வந்து மதில் தாண்டி மேற்கு பகுதி பக்கம் கொட்டினார்கள். (அவ்வளவு குரோதம்!) மேற்கு பகுதியை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை…

சனி 2

சனி 5ம் பாவத்தில் இருப்பின் புத்திர சுகம் இருக்காது. சனியுடன் மாந்தி சேர்ந்திருந்தால் வாழ்வில் சிரமமே ஏற்படும். சனி லக்னத்திற்க 8ல் இருந்தால் தீர்காயுள் அளித்து செல்வத்தினையும் அளிப்பார். சனி, சுக்கிரசேர்க்கை எங்கிருப்பினும் திருமண வாக்கையில் குறைபாடோ இரகசிய முறைகேடோ இருக்கும்.

சனி 1

சனி லக்னத்தில் நின்றிடில் அதிகம் பேசாத மந்தநிலை, பலரையும் குறை சொல்லும் குணம் இருக்கும். சனீஸ்வரன் 7ம் பாவாதிபதியோடு சேர்ந்து இருந்தாலும் 7மதிபதியை பார்த்தாலும் நல்ல ஆயுளுடன் வாழலாம். சனி 8ம் பாவத்தில் இருந்தால் தீர்க்காயுசு. சனியுடன், சூரியன் நின்றிடில் ஜாதகரை நீசசெயலில் ஈடுபடவைக்கும். சனிபகவான், செவ்வாயுடன் 6ம்பாவாதிபதியோடு இருப்பின் திருட்டுபயம் ஏற்படும். சனியும், செவ்வாயும், சக்கிரனும் 2,4,7,12ல் ஏதாவத ஒரு பாவத்தில் இருந்தால் இருதார யோகம் உண்டு.

சுக்கிரன் 21

சுக்கிரன் அல்லது 7ம் வீட்டிற்கு அதிபதி சனி, சூரியனுக்கு இடையில் இருப்பின் திருமணம் நடைபெறாது.  சனி 7ம் வீட்டை பார்த்தாலும் திருமணமாவது அறிது. சுக்கிரன் நீச்சமாக இருந்தால் தன் இனத்திலேயே காதல்புரிந்து மணம் செய்து கொள்வர். சுக்கிரனுக்கு சுக்ரன் 6 ,8 ஆக ஆண், பெண்ணுக்கு இருக்குமாயின் இனிதான குடும்ப வாழ்க்கை அமையாது, அன்பாக இருக்கமாட்டார்கள்.

சுக்கிரன் 20

சுக்கிரன் உச்சம் பெற்றோ அல்லது ஆட்சிபெற்றோ செவ்வாயுடன் இணைந்து லக்கினத்திற்கு 1,4,7,10 ஆகிய இடத்தில் இருப்பின் பெண்களை விரும்புவர்களாகவும், இழிவு குணம் கொண்டோராகவும் இருப்பர். சுக்கிரனுக்கும் 7ம் அதிபதிக்கும் அல்லது 7மிடத்திற்கும் நல்ல சம்மந்தமாக காதல் திருமணம் கைகூடிவரும். சுக்ரன் உள்ள ராசியும் ( ஆண் ஜாதகத்தில் ) செவ்வாய் உள்ள ராசியும் ( பெண் ஜாதகத்தில்) ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஆகும்.

சுக்கிரன் 19

சுக்கிரன், சனி பரிவர்த்தனை பொதுவாக திருமண வகையில் நாட்டத்தினை தடுத்து ஆன்மீக வழியில் மனதை ஈடுபடுத்தும். சுக்கிரன் மகரத்தில் அமர்ந்தால் பெருமாள் மீது பக்தியும், ரிஷப சந்திரன் ஸ்ரீ வெங்டாஜலபதி மீது அளவற்ற பக்தி ஏற்படும். சுக்ரன் 7ம் பாவம், 7ம் அதிபதி ஆகியவற்றிற்கு, சனி, ராகு, கேது சம்பந்தம் ஏற்படின் பிரிவினைதரும், செவ்வாய் சம்பந்தம் ஏற்படின் விவாக ரத்து ஏற்படும்.

வாழ்க்கை 9

வாழ்க்கை என்பது கற்பனை அல்ல யதார்த்தம் இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் பெறுவதற்கு எதை, எதை இழந்தோம் என்றும் இழந்ததற்கு எதை எதை எப்படி எப்படி எவர் எவரிடம் பெற்றோம் என்றும் நடு நிலையில் தனக்குள் உண்மையாய் சிந்தித்து பார்த்தால் மட்டுமே தெரியும் விளங்கும்.

மொழி 4

தெய்வம் விதியின் எழுத்தை வகுத்தது மனிதன் எழுத்துக்கு விதி வகுத்தான். ஆனாலும் பல கோடிகளில் யாரோ ஒரிருவர் விதி வகுத்த வாழ்வை மீறி தான் வகுத்த வாழ்விற்கு விதி அமைத்து கொண்டவர்ளும் இருக்கிறார்கள்.

மொழி 3

சொல் _செவிக்கு புலனாகும் போது ஒலியாகவும் கண்ணுக்கு புலனாகும் போது எழுத்து வடிவில் இயங்குகிறது. இறைவன் விதியை வகுத்து எழுதி படைத்தான்.  மனிதன் எழுதி விதியை படைத்தான். கம்பன், காளிதாசன், வால்மீகி, திருவள்ளூவர், பாரதி போன்றோர் இந்த வகையை சார்ந்தவர்கள். இறைவன் உண்டாக்கிய நம் தலைஎழுத்தின் வரியும், வடிவமும் தெரியவில்லை, அதன் பொருளும் தெரியவில்லை. ஆனால் மண், உலகிற்கு மொழி படைத்துக் கொடுத்த மனிதர்கள் தாங்கள் வகுத்த விதிக்கு இலக்கணம் எனும் பெயரும் சூட்டி உள்ளனர்.

மொழி 2

எழுத்துருவத்திலிருந்து சொற்கள் பிறந்தது. சொற்கள் பொருள்களை உடையதாயிற்று அதில் பல பொருள்களை அடைந்த ஒரு சொல்லும் ஒரு பொருளை அடைந்த பல சொற்களுமாக மொழி  நிலத்தில் வார்த்தைகள் விளைந்தது. ஒற்றை தனி மலர் போல் ஒர் எழுத்தில் விளைந்த சொற்களும் தொகுத்த மலர் மாலையை போல் பல எழுத்துக்கள் இணைந்த விளைந்த சொற்களுமாக மொழி வளர்ந்தது.

மொழி 1

தனை புகழ தன்னிடத்திலே சொல் இல்லாத தனி தமிழ். எந்த மொழிக்கும் ஆதி வடிவம் ஒசைதான். முன் பண்படாமலும், வரையறையில்லாமல் வந்த சப்தங்களே ஒசை கால போக்கில் பண்பட்டு, வரையறையில் அமைந்ததே ஒலி, ஒலியும் ஒசையும் கண்ணுக்கு புலன்கா கண்ணுக்கு தெரியாத கடவுளை கண்ணுக்கு தெரியும் விக்கிரகங்களை உண்டாக்கி கண்டு வழிபட்டு இறையை அறிவது போல தோற்றமில்லா ஒலிக்கு தோற்றமாய் அமைவதே வரி வடிவங்களாய் வந்ததே எழுத்து எழுத்தின் மூலம் மொழிக்கு உருவம் பிறந்தது.

இராமாயணம் பற்றி –

1927 வையாபுரி புலவர் அறிஞர் குழு ஆராய்ந்து அறிவித்தது 124000 – தனி சொற்கள். 118 படலங்கள்       இடை செருகல்  10.368 பாடல்கள் மிகை பாடல் 1286   கம்பன் பயன் சொற்கள் 3. முதல் 3 1\2 லட்சம்

கம்பன் 3

கரையறியா காட்டாற்று வெள்ளம் போல கவி பொழிந்து வான்மீகி உலகுக்கு ஈந்த _ திரையறியா ஒட்டத்தை தேக்கி கட்டி திறன்மிகு கால்வாய்கள் செய்து பாய்ச்சி தரையறியா காவனத்தை தந்தான் தனி புலமை   கவிதை தச்சன் வில் கிடந்தது மிதிலை தனில் கல் கிடந்தது கானகம் தனில் நெல் கிடந்தது சடையன் வீட்டில் சொல் கிடந்தது கம்பன் மனத்தில் உதித்தெழுந்து ராமன் கதை

கம்பன் 2

கம்ப இராமாயணம் பற்றி மேல்படிந்த பிசின் அகற்றி மெல்ல கீறி மெதுவாக சுளை எடுத்து தேன் வார்த்து நூல் படித்த மனத்தவர்க்கு விருந்து வைத்தான் கம்பன் எனும் தமிழ் தாயால் நோற்ற மைந்தன். நாமக்கல் கவிஞர்

கம்பன் 1

கம்பன் என்றாலே நினைவுக்கு வருவது யுக நாயகனான ராமனின் கதையாகிய  ராமாயணமே, கம்ப ராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது வடமொழியில் வால்மீகியால் எழுதப்பட்ட ராமாயணத்தை தமிழ் கூறும் நல் உலகிற்க்கு தந்தவர் கம்பர். கம்பரின் ராமாயணம் தமிழ் பண்பாட்டின் நன்மைகளை முழுமையாக பிரதிபலிப்பது இவரின் காலம் 12ம் நூற்றாண்டின் பிற்பகுதி, இவர் மயிலாடுதுறை அருகே உள்ள தேரெழுந்தூர் என்னும் இடத்ததில் பிறந்தார். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் அவை புலவரான ஒட்டக் கூத்தரும் நளவெண்பா தந்த புகழேந்தியும் கம்பரின்…

ஆசிரியருக்கு உண்டான தகுதி வரையறை

நிலத்தை போல தம்மை அடைந்தவர்களை தாங்கும் பொறுமையும் மலையை போல் நிலை கலங்காமல் தன்னிடமிருந்து கொள்ள குறையாத வளமும் நல்ல நறுமணம் தரும் மலரை போன்ற மென்மையும் துலாகோலை போல நடுநிலை பிறழாத தன்மையும் உடையவரே ஆசிரியர் ஆவர்.

அறிவு என்பதற்கு வரையறை

அறிவு என்பதற்கு வரையறை நல்லதின் நலனும் தீயதின் தீதும் உள்ளவாறு அறிதலே அறிவு என்பதாம் இதில் எங்கு பிழை ஏற்படினும் மிக்க கற்றவரேயானாலும் அவர் அறிவு அற்றவரே

வாழ்க்கை 8

நாம் ஏதோ ஒரு திசையில் ஏதோ ஒரு நோக்கத்தோடு நின்று கொண்டிருக்கும் போது நம்முடைய நினைவில் அந்த வினாடி வரை தோன்றாத ஏதேனும் ஒரு திசையை காண்பித்து அந்த வழியில் நாம் புறப்பட வேண்டியிருப்பதின் அவசியத்தை யாராவது நமக்கு நினைவு படுத்திக் கொண்டே யாரோ வந்து போகிறார்கள். அதன் காரணங்கள் நமக்கு தெரிவதில்லை நமக்கு தெரிந்த காரணங்கள் அதற்க்கு பொருந்துவதில்லை இது  தான் வாழ்க்கையின் சூட்சுமம்

வாழ்க்கை. 7

நம்முடைய வினைகள் நமக்குத் தெரியத் தொடங்கும் போது நாம் எதை, எதை எப்படியெல்லாம், எப்போது அனுபவிக்க வேண்டி வரும் என்பது தெரிந்து விடும். அப்படி தெரியும் போது நமக்கு பயம் போய் விடும், பயம் போய்விட்டால் தெளிவு கிடைத்துவிடும். தெளிவு வந்து விட்டால் சிந்தனை சரியாய் அமையும். சிந்தனை சரியாய் அமையும் போது செயலும் சரியாய் அமையும். சரியாக அமைந்த செயல் நன்மையை மட்டுமே தரும் அப்போது பாபம் பின் தொடராது. பாபம் தொடராத வாழ்க்கை அமைவது…

வாழ்க்கை. 6

தன்னைத்தான் அறிய வேணும் சாராமல் சார வேணும் பின்னைத் தான் அறிவதெல்லாம் பேயறிவு ஆகுமடி – அகப்பேய் சித்தர். தேவையைப் பற்றியும் ஆசையைப் பற்றியும் அறிவு இல்லாதவர்களுக்கு வேறு என்ன தெரிந்து இருந்தாலும் அது தெரிந்து கொள்ள உதவிய அறிவு பேயறிவு ஆகும். பேயறிவு என்று அவர் சொன்ன காரணம் அந்த அறிவு நன்மையை தராது, பாபத்தை போக்காது, புண்ணியத்தை சேர்க்காது முக்கியமாக தன்னை அறிந்திருக்காது. தன்னைத் தான் அறியும் போது நம்முடைய வினைகள் நமக்கு தெரியத்…

வாழ்க்கை.5

உண்மையில், நமக்கு நமது மனதைப் பற்றியும், நமது உடலைப்பற்றியும் அறியும் தன்மை அமைந்துவிட்டால் நாம் அறிவுள்ளவர்கள் ஆவோம். நாம், உடலை பற்றி அறிந்து கொண்டால் தேவையைப்பற்றி அறிந்து கொள்ளலாம். மனதைப் பற்றி அறிந்து கொண்டால் ஆசையைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இது இரண்டை பற்றியும் அறிந்து கொண்டவர் எல்லாம் அறிந்தவர் ஆகின்றனர்.

வாழ்க்கை. 4

 நாம் அறமுடன் வாழ்ந்து பொருளை சேர்த்தால் இன்பமுடன் இருந்து வீடு பேற்றை அடையலாம். இது வாழும் வகை, இப்படி எல்லோராலும் வாழ முடிகிறதா என்ற வினா நமக்குள் எழும்போது இல்லையென்றுதான் சொல்ல தோன்றுகிறது,  இப்போதைய சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து பொருளை சேர்ப்பது நோக்கமாகிவிட்டது. அப்படி அடிப்படை மாறும் போது எல்லாமே மாறிதானே போகும். வினைகளை தீர்க்க எடுத்த இந்த ஜென்மானது வினைகளை மேலும், மேலும் பெருக்கிக் கொள்ளவே அமைந்து விட்டது.

வாழ்க்கை.3

தன்னைப் பற்றிய சிந்தனையை  தேவைகளில் செலுத்தும் போது நன்மை  நம்மை நாடி வரும் தேவைகளில் ஆசைகளின் அளவுகள் அதிகமாக, அதிகமாக தீமைகள் நம்மை நாடி வந்து தொல்லை செய்யும்.  இதை புண்ணியம், பாபம் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். தன்னைப் பற்றி சரியான சுய மதிப்பீடு இல்லாத நிலையில் நம்மை தீமைகள் அணுகுவதும் நாம் பாபத்திற்கு ஆட்படுவதும் தவிர்க்க முடியாத விஷயமாகிவிடும்.

வாழ்க்கை. 2

உதாரணமாக பசிக்கு உணவு என்பது தேவை ஆனால் அந்த உணவை நாம் ஆசையின் காரணமாக தேவைக்கு அதிகமாக உண்ணும் போது நமக்கு நன்மை செய்ய வேண்டிய உணவு தீமையை செய்ய தொடங்கிவிடுகிறது. அளவுகளை ஆசையின் காரணமாக நாம் தாண்டும் போது முன்னோர்கள் நமக்கு உணர்த்தியது போல் அமிர்தமும் நஞ்சாகிறது. நமக்கு எது தேவையென்று அறிய தொடங்கி விட்டாலே நமது ஆசையின் அளவு முடிந்த அளவு குறைந்துவிடும்.

வாழ்க்கை. 1

மனிதனுடைய தேவைக்கும், ஆசைக்கும்  நன்மைக்கும், தீமைக்கும் இடையில் தான் வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. தேவைகளின் விகிதாசாரமும், ஆசைகளின் விகிதாசாரமுமே நன்மை தீமைகளை உண்டாக்குகிறது. தேவையென்பது முக்கியமாக உடல் சம்பந்தப்பட்டது. அதாவது, பசி, தூக்கம், போன்றவை, நாம் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் உடலுக்கு சக்தி தேவைப்படும் போது உடல் தனது தேவையை தெரியப்படுத்துகிறது. அந்த தேவையை பூர்த்தி செய்யும் இடத்தில் ஆசை நுழையும்போது, நன்மையோ, தீமையோ உண்டாகிறது.

வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை

    நம்முடைய இன்றைய நிலை திருப்திகரமாக இல்லையென்றால் முதலில் நம் எண்ணங்களை மாற்றவேண்டும். எண்ணங்கள் மாறுகிற போது அதற்கேற்ப எல்லாமே மாறும். இது மாறாத உண்மை.   இந்த நொடி முதல் யாவும் மாறும், மாற்றத்திற்கான மூலம் எண்ணங்களே… எண்ணங்கள் மாற செயல்கள் மாறும்…. செயல்கள் மாற விளைவுகள் மாறும்…. விளைவுகள் மாற  வாழ்க்கையே மாறிவிடும். வளமான எண்ணங்களே வளமான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற பேருண்மையைப் புரிந்து கொண்டு வளமாக வாழ்வோம்…