சிங்கிரி குடி நரசிம்மர்

கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் நரசிம்மர் உக்கிரமாக அருள்பாலிக்கிறார். ஓம் நமோ நாராயணா என்னும் நாமத்தை நிலை நிறுத்திய அவதாரம்தான் நரசிம்ம அவதாரம். ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது. ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது. இவ்வகை அபூர்வ நரசிம்மர் தலங்கள் ராஜஸ்தானிலும், தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதாகக் கூறுகிறார்கள்.

அரியக்குடி ஸ்ரீநிவாசப் பெருமாள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ளது அரியக்குடி. இங்கு எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீநிவாசப் பெருமாள். இங்கு மூலைக் கருடன் வழிபாடு சிறப்பானது. நல்லது நடக்கவும், தீமைகள் மறையவும் இங்கு மூலைக் கருடனுக்கு சிதறுகாய் உடைப்பது வழக்கம்.

உத்திரகோசமங்கை 2

உத்திரகோசமங்கை கோவில் அமைப்பு முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார். ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. இடதுபுறம் உள்ள கோபுரம் மொட்டையாக காணப்படுகிறது. பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு…

உத்திரகோசமங்கை. 1

 இராமநாதபுரத்தில் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்று தான் உத்திரகோசமங்கை.  இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம். சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இது. உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  59

மேலை நாடுகளில் எந்த அளவிற்க்குச் சகிப்பற்ற தன்மை நிலவுகிறது என்பது பற்றி உங்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. அங்கேயே உயிரைவிட நேருமோ என்றுகூட நான் பலமுறை நினைக்கின்ற அளவிற்கு அங்கே மதச் சகிப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது. மதத்திற்காக ஒரு மனிதனைக் கொல்வது என்பது அங்கே சர்வ சாதாரணமான ஒன்று. தங்கள் நாகரீகத்தைப்பற்றிப் பெருமையடித்துக் கொள்கின்ற அவர்கள் அதையும் ஒரு நாகரீகமாகச் சொல்லி, இன்று இல்லா விட்டால் நாளைக்குச் செய்யலாம்.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்   58

ரத்தமாகக் கலந்து நம்மில் ஒன்றாகியுள்ளது. இந்த உண்மை நம் ரத்தகுழாய் தோறும் ஓடிக் கொண்டிருக்கிறது; நம் நாடு மத சகிப்புத்தன்மையின் மகத்தான நிலமாக ஆகிவிட்டது. இங்கே இந்த நாட்டில் மட்டுமே மக்கள் தங்கள் மதத்தையே இகழ வந்த மதங்களுக்கும் கோயில்களும் சர்ச்சுகளும் கட்டித் தருகின்றனர். இந்த மகத்தான ஒரு கருத்தைத்தான் உலகம் நம்மிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  57

இது இதுவரை கூறப்பட்ட வாக்கியங்களுள் நினைவில் நிறுத்த வேண்டிய வேண்டிய ஒன்றும், இது வரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மகத்தான உண்மைகளுள் மிகச் சிறந்த உண்மையும் ஆகும். இந்துக்களாகிய நமக்கு இந்த உண்மை, தேசிய வாழ்வின் முதுகெலும்பாக அமைந்துள்ளது. ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி என்கின்ற இந்த ஒரு கருத்து நமது தேசிய வாழ்வில் எத்தனையோ நூற்றாண்டுகளைக் கடந்து நம்மிடம் வந்துள்ளது; காலந்தோறும் அளவிலும் நிறைவிலும் புதிய வேகம் பெற்று இன்று அது நமது தேசிய வாழ்வில் இரண்டற…

விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்  56

வரலாறு எட்ட முடியாத, பாரம்பரியங்கள் தங்கள் பார்வையைச் செலுத்தத் துணியாத அளவிற்கு மிகத் தொலைவான, அடர்ந்ததான அந்தப் பழங்காலத்தில் இந்தியாவில் தோன்றிய மகத்தான ரிஷிகளுள் ஒருவர், ஏகம் ஸத் விப்ரா பஹீதா வதந்தி – இருப்பவர் ஒருவரே, ரிஷிகள் அவரைப் பலவாறாக அழைக்கிறார்கள் என்று கூறினார்.

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில்,

சலங்கையின் விலை ஆயிரக்கணக்கில், அதை காலில் தான் அணிய முடியும். குங்குமத்தின் விலை மிகக்குறைவு. அதை நெற்றியில் அலங்கரித்து கொள்வார்கள். இங்கு விலை முக்கியமில்லை, அதன் பெருமை தான் முக்கியம்.

சுக்கிரன் 18

சுக்ரன், குரு விருச்சிக லக்னகாரர்களுக்கு சமசப்தமாக இருந்தால் சிற்றின்ப நாட்டம் அதிகம் ஏற்படும். சுக்கிரனுக்கு கேந்திர கோணங்களில் சனி, ராகு, கேது நின்றால் யோகம் ஏற்படும். சுக்கிரனுடன் ராகு அல்லது கேது, சூரியன் கூடி நின்றால் ஜாதகரைத் தேடி வம்புகள் வழக்குகள் வரும், பொருள் இழப்பும் ஏற்படும்.

சுக்கிரன் 17

சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம், நிறைய பெறுவார்கள். சுக்ரன் 4ல் இருந்தால் சிறு பிராயம்  முதலே தாய்மீது பாசம் அதிகம் இருக்கும்.  தாய் நலனில் கவனம் செலுத்துவார், அறிவிலும், அந்தஸ்திலும் உயர்ந்தவராய் விளங்குவார். சுக்ரன் விருச்சிக லக்னகாரர்களுக்கு 7மிடத்ததிபதியாக, களத்திரகாரகனாக ஆகிறார், காதல் திருமணத்தையும், சனி, ராகு கலப்பு திருமணத்தையும், தேய்பிறைச்சந்திரன் குறையுள்ள களத்திரத்தையும் தருவார்.

சுக்கிரன் 16

சுக்ரன் கன்னியில் இருக்கப் பிறந்தவர்கள் அறிவாற்றல் இருக்கும், வேற்றுமாநிலத்தில் உழைத்து வாழ்வார்கள்.   அழகுசாதனங்களில் நாட்டமுள்ளவராய் இருப்பர், காதல் தோல்வி ஏற்படும். இனிமையாக பேசுவார்கள். சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பொலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள். சுக்ரன் துலாத்தில் உள்ளவர்கள் தோற்றப்பெலிவு இருக்கும், அறிவாற்றல் இருக்கும், எதிர்ப்பை சமாளிப்பார்கள், செல்வம் நிறைய பெறுவார்கள்.

சுக்கிரன் 15

சுக்கிரன், சந்திரன் கூடி மேஷம், விருச்சிகம், கும்பம், மகரம் இவைகளில் ஒன்றில் இருந்து லக்னமாகி அதை சனி, செவ்வாய், சூரியன், ராகு நோக்கின் அந்த ஜாதகி விபசாரியாவாள். சுக்கிரனும், லக்னாதிபதியும் சேர்ந்து 6,8,12ல் இருப்பின் அந்த ஜாதகர் காமசுகத்தில் அதிகம் ஈடுபடமாட்டார்.  வெறுப்புள்ளவர் ஆவர். சுக்ரன் கும்பத்தில் இருப்பின் தோற்றப் பொலிவுடனிருப்பார்கள், மனதில் கலவரமும், மனைவிக்கு கட்டுப்பட்டிருப்பார்கள்.

சுக்கிரன் 14

சுக்கிரன் பாவரோடு கூடி 6,8ல் பலம் பெற்றிருக்கப் பிறந்தவர் ஸ்திரீ சபலம் உள்ளவன். சுக்கிரன் களத்திராதிபதியாகி அந்த சுக்கிரனை சனி, செவ்வாய் பார்க்க பிறந்தவர் எப்போதும் விலை மாதர்கள் தொடர்பு உடையவர். அம்சத்தில் சுக்கிரன் வீட்டில் செவ்வாயும், செவ்வாய் வீட்டில் சுக்கிரனும் அமையப்பெறின், ஜாதகி தன் இச்சையினாலேயே பல பேர்களை சம்போகம் செய்து சந்தோஷமாக இருப்பாள்.

சுக்கிரன் 13

சுக்கிரன் துலாத்தில் அமர்ந்து அதுவே லக்னமாயின் பல சிறு தொழிலில் நவீன பொருளை விற்று, தொழில் செய்து சம்பாதிப்பர். சுக்கிரன் மிதுன வீட்டிலோ, ரிஷப வீட்டிலோ, துலாம் வீட்டிலோ இருப்பின் 4ஜாதகர் காமுகனாக இருப்பான். சுக்கிரன் வீட்டில் லக்னாதிபதி இருப்பினும் சுக்கினுடன் சேரினும், பார்ப்பினும் அந்த ஜாதகர் ஸ்தீரிலோலன்.

நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

பிறரை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளவும் வேண்டாம்.. உன்னைப் பற்றி அதிகம் பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வேண்டாம்.. இரண்டுமே உங்கள் நிம்மதிக்கு கேடு விளைவிக்கும்..!

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 5

அவளை வேறு எந்தப் பெண்ணுடனும் ஒப்பிட வேண்டாம் அவளைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவளை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கலாம். “உன் நண்பன் என்ன செய்கிறான் என்று பார்க்கவில்லையா?”  எங்கள் பக்கத்து வீட்டு மனைவியிடமிருந்து உங்களால் கற்றுக்கொள்ள முடியவில்லையா?” “அப்படியா?” பழைய பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும் விவாதிக்கப்பட்ட மற்றும் தீர்க்கப்பட்ட பிரச்சினைகளைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்.  தற்போதைய பிரச்சினையில் ஒட்டிக்கொண்டு, பெரியவர்களைப் போல விவாதித்து, தொடரவும்.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 4

பொதுவில் மனைவியைத் திருத்த வேண்டாம்  உங்கள் மனைவியை பொதுவில் திருத்துவதைத் தவிர்க்கவும், அது உங்களை ஒரு நல்ல மனிதராகக் காட்டாது, மேலும் அவரது சுயமரியாதையை பாதிக்கும். கோபத்தில் திருத்தம் செய்வதைத் தவிர்க்கவும் கோபத்தில் உங்கள் மனைவியைத் திருத்துவதையும், கூச்சலிடுவதையும், திட்டுவதையும், அடிப்பதையும், பிரச்சனை செய்வதையும் நிறுத்துங்கள். உண்மையான ஆண்கள் அப்படிச் செய்வதில்லை.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த  வழிகள் 3

எது சரியானது என்பதற்காக அவளைப் பாராட்டுங்கள் நன்றாக செய்யாத போது திருத்துவது தவறாகும் நல்ல செயல்களுக்காக உங்கள் மனைவியைப் பாராட்டி பாராட்டும் பழக்கத்தை உருவாக்குங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு முன் அதைச் செய்யாதீர்கள் உங்கள் பிள்ளைகள் முன்னிலையில் உங்கள் மனைவியைத் திருத்துவதைத் தவிர்க்கவும். உங்கள் பிள்ளைகளுக்கு முன்பாக உங்கள் மனைவியை இடைவிடாமல் திருத்துவது அவர்கள் அவளை அவமதிக்கச் செய்யும்.

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த வழிகள்..2

 காதலில் செய்யுங்கள்  காதலில் திருத்த வேண்டும்.  வேறு வழியில் செய்தால், அது விமர்சனமாகவும் கண்டனமாகவும் மாறும்.  3a: விமர்சிக்க வேண்டாம் மனைவியை விமர்சிப்பதை நிறுத்துங்கள், மாறாக காதலில் சரியானது.  ஆக்கபூர்வமான விமர்சனம் என்று பெரும்பாலானோர் கூறுவார்கள்.  ஆனால் உண்மையில், இது பிழைகள் மற்றும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம் மறுப்பு என்று பொருள்.  திருத்தம் என்பது தவறுகளுக்கு சிறந்த விருப்பங்களை வழங்கும் செயலாகும்  திருத்தமும் விமர்சனமும் எப்போதும் ஒன்றல்ல  3b: கணவர் A கூறுகிறார்  இது என்ன வகையான…

உங்கள் மனைவியின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவளைத் திருத்த வழிகள்…1

 உங்கள் குரலைக் குறைக்கவும் மனைவியைப் பார்த்து கத்தாதே, அவள் உன் குழந்தை இல்லை. நீங்கள் சரி செய்யலாம், ஆம், ஆனால் ஏன் கத்துகிறீர்கள்? கத்துவதால் பிரச்னை பெரிதாவது தவிர்க்கமுடியாது அப்படி பெரிதாவதால் நம் நிம்மதி கெடும் அதனால் கத்துவதை செய்யாதீர்கள்

மன்னிப்பு கேட்பது 3

ஒரு மனிதன் என்பவன் ஒருவனல்ல என்றும் எல்லா மனிதனும்  ஒன்றுதான் என்றும் இங்கு நட்சத்திரத்திற்கும் எறும்பிற்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற புரிதல் தொடங்கியிருக்க வேண்டும்… தெரியாமல் சிந்தி விடும் தேநீருக்காக சகமனிதன் மீது கோபத்தை வெளிப்படுத்தாத நிமிடத்தில் இருந்து நாம் மன்னிப்பிற்கான முதல் விதையைக் கண்டெடுக்கிறோம் மன்னிப்பு கேட்பதும் மன்னிப்பதும் வெறும் செயல் அல்ல ஞானத்திற்கான சிறு ஒத்திகை.

மன்னிப்பு கேட்பது 2

ஒரு குழந்தையின் புன்னகையில் சில நிமிடங்களாவது நிஜமாகக் கரைந்திருக்க வேண்டும். யாரும் பார்க்காத போதும் ஒரு கவிதைக்காக அழுதிருக்க வேண்டும். சக மனிதனின் புன்னகையின் மதிப்பை கண்ணீரின் அர்த்தத்தை மரணத்தின் விஸ்வரூபத்தை நிஜமாகத் தரிசித்திருக்க வேண்டும்.

யதார்த்தம்!!

கஷ்டப்பட்டு படிச்சோம் கஷ்டப்பட்டு வேலைக்கு வந்தோம்.. கஷ்டப்பட்டு காதலிச்சோம் கஷ்டப்பட்டு கண்ணாலம் கட்டிகிட்டோம்.. கஷ்டப்பட்டு புள்ள பெத்து வளக்குறோம் கஷ்டப்பட்டு கடன் வாங்கி வீடு கட்டுறோம்.. கஷ்டப்பட்டு கடன                  அடைக்க ஓடுவோம்.. கஷ்டப்பட்டு கடைசில கஷ்டப்படாம செத்துட்டா போதும்ன்னு நினைச்சு நினைச்சு.. கஷ்டப்பட்டுட்டே செத்திடுவோம்..

வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டிய உப்புகள் சில:-

கணவன்கள் – படபடப்பு மனைவிகள் – நச்சரிப்பு டீன் ஏஜ்க்கள் – பரபரப்பு மாணவர்கள் – ஏய்ப்பு மாமியார்கள் – சிடுசிடுப்பு மருமகள்கள் – கடுகடுப்பு வக்கீல்கள் – ஒத்திவைப்பு டாக்டர்கள் – புறக்கணிப்பு அரசியல்வாதிகள் – ஆர்ப்பரிப்பு வயதானவர்கள் – தொணதொணப்பு ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு சிரிப்பு. இது உடம்புக்கு மிகச்சிறப்பு…