சுந்தர யோக சிகிச்சை முறை 142

தூண்டுதலுக்கு இணங்க, மலப்போக்குச் செய்யாவிட்டால் கோரநிலை உண்டாகிறது. மலத்துவாரத்திற்கு மேல் நிற்கும் “ ரெக்ட “ த்துக்குள் ( RECTUM ) பெருங்குடல்  வழியாக  மலம் தள்ளப்பட்டவுடன் தான் போக்கு  உணர்ச்சி ஏற்படுகிறது. வெளிச்செல்லாவிட்டால் முன்போக வழியில்லாமல் ரெக்டத்திலேயே குவிந்து தேங்குகிறது இதிலிருக்கும் நீர்ச்சத்து உள்ளிழுக்கப்படவே கெட்டியாக கல்போல் ஆகிறது.