விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள்! 35

அங்குள்ள பலரும், ஏன், பண்பட்டு உள்ளோரும் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் இந்தப் போட்டி, போராட்டம், வாணிப நாகரீகத்தின் காட்டு மிராண்டித்தனம் இவைகளால் ஏற்கனவே களைத்துப் போய்விட்டார்கள் மேலான ஒன்றை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே வேளையில் ஐரோப்பாவின் தீமைகளுக்கெல்லாம் அரசியல் மற்றும் சமுதாய மாற்றங்களே ஒரே தீர்வுஎன்றும் சிலர் இன்னும் அங்கே பிடிவாதமாக நம்பிக் கொண்டுதான் இருக்கின்றனர்