வியாழன் 3

வியாழன் 5லும், 5ம்பாவாதிபதி உச்சம், ஆட்சியில் நின்றிடில் புத்திர பாக்கியம் ஏற்படும். குரு பார்வை 5ம் பாவாதிபதியை கேந்திர, திரிகோணத்தில் நின்றிடில் புத்ர பாக்யம் ஏற்படும். குரு ஒற்றைப்படை ராசியில் 5 அல்லது 9ல் இருந்தால் சாதனையாளராகவும், தலைவராகவும் விளங்குவார். குரு பலமுடன் இருந்தால் வேத விற்பன்னராகி ஞானஒளி பெறுவார். குரு சிம்மத்தில் இருப்பின் கீர்த்தி பெற்றவர்கள், பலசாலிகள், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், தலைமை தாங்குகிற தகுதி உடையவர்கள்.