உன்னை அழித்துக் கொண்டாவது பிறருக்கு நன்மை செய்

மற்றவர்களுடைய நன்மைக்காக என்னுடைய இந்த வாழ்க்கை அழிந்து போகிற அந்த நாளும் வருமா ? இந்த உலகம் வெறும் குழந்தை விளையாட்டு அல்ல. மற்றவர்களின் நன்மைக்காகத் தங்களுடைய இதயத்தில் இரத்தத்தைச் சிந்தி, பாதைஅமைப்பவர்கள் தாம் பெரியோர்கள் ஆவார்கள். ஒருவர் தமது உடலைத் தந்து பாலம்ஒன்றை அமைக்கிறார். அந்தப் பாலத்தின் உதவியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்த ஆற்றைக் கடந்து விடுகிறார்கள். இப்படி நீண்ட நெடுங்காலமாக நடந்துகொண்டு வந்திருக்கிறது. இந்த முறை அப்படியே இருக்கட்டும். அப்படியே என்றைக்கும் இருக்கட்டும்.