உரையாடலின் ஒரு பகுதி 23

உங்களையே நீங்கள் அறிய முற்படும் போது முதலில் குழப்பமும் அதை தொடர்ந்து பயமும் தான் ஏற்படும்.    உங்களை நீங்கள் என்னவாக நினைத்துக் கொண்டிருந்தீர்களோ அது இல்லாததைக் கண்டு கலவரப்படுவீர்கள். நீங்கள் பெருமையாயும், உன்னதமாயும் சத்தியம் என்று ஊருக்கு, உறவுக்கு, நட்புக்கு சொல்லியதெல்லாம் உங்களிடம் சில சந்தர்ப்பங்களில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைவீர்கள் சில நபர்கள் தியானத்தில் மூர்ச்சையடைவது இதனால்தான்.