நன்மையே செய், நன்மை தானாக வந்தடையும்

தீமையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் தீமை செய்கிறோம். நன்மையைச் செய்வதனால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை செய்துகொள்கிறோம். கர்மயோகத்தின் விதியின்படி, ஒருவன் செய்த ஒரு கர்மத்தை, அது தனக்கு உரியபலனை விளைவித்து முடிக்கும் வரையிலும் அழிக்க முடியாது. கருமம் தனக்கு உரியபலனை விளைவிப்பதை இயற்கையிலுள்ள எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்தமுடியாது. நான் ஒரு தீய செயலைச் செய்தால், அதற்கு உரிய துன்பத்தை நான்அனுபவித்தே ஆகவேண்டும். இந்த பிரபஞ்சத்திலுள்ள எந்தச் சக்தியாலும் இதைத்தடுக்கவும் முடியாது, நிறுத்தி வைக்கவும்…