கரடு முரடான பாதை

இந்தப் பிரபஞ்சத்திலேயே நன்மைக்கு அழைத்துச் செல்லும் பாதைதான் மிகவும் கரடுமுரடாகவும், செங்குத்தானதாகவும் இருக்கிறது. அந்தப் பாதையில் எத்தனை பேர்வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தான் வியப்புக்கு உரிய விஷயம். பல பேர்தோல்வி அடைந்து போனதில் ஆச்சரியமே இல்லை. ஆயிரம் முறை இடறிவிழுந்தவன் மூலம் தான் நல்ல ஒழுக்கத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டும்.