சுந்தர யோக சிகிச்சை முறை 61

யோகியார்- யோகம் யாருக்குக் கிட்டுகிறது? என்ற கேள்விகளுக்குப் பரமாத்மா சொன்ன ” யுக்தம் ” பிணைந்ததான உணவு, ஓய்வு, உழைப்பு, தூக்கம், விழிப்பு என்ற ஐந்து திட்டங்களை ஆராய்ந்தோம். இங்கு நோய் தடுத்தல் என்று விசாரணை  செய்யும் பொழுது, மேல் வறிய ஆராய்ச்சிகளுக்கு இடம் ஏது என்று வினவலாம்.  பரமாத்மா துக்கத்தைப் போக்கும் யோகம் கிட்டுகிறது எனக்கூறுகிறார்.  யோகத்தால் பிணியைத் தடுத்தலே நாம் எடுத்த விஷயமாகும்.  பிணி என்பது துக்கத்தின் ஒரு தொகுதி.  பிணி வந்தபின் அதைப்போக்கும்…