உண்மையான அறிவும் – மெய்யான அறிவும்

ஒரு பொருளுடன் சேர்த்துப் பார்க்காமல் தனித்தனியே பார்க்கும் போது அதை அதனுடைய குணம் என்கிறோம். வேறுபாடு இன்னது என்பதை நம்மால் நிச்சயமாகக் கூற இயலாது. பொருள்களைப் பற்றி நாம் காண்பது உணர்வதெல்லாம் கலப்பற்ற தனியான இருப்பு என்பதே. மற்றவை அனைத்தும் நம்முள்ளே இருக்கிறது. நம்மிடமிருக்கும் எதற்கும் அது இருப்பது ஒன்றே நிச்சயமான சான்றாகும். ஒன்றைப் பலவாகப் பார்ப்பது இரண்டாம் நிலையிலுள்ள ஒர் உண்மையே. பாம்பு என்பது இருப்பது தன்னளவில் உண்மை. ஆயினும் கயிற்றைப் பாம்பாக நினைப்பது தவறு.…