ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  14

தன்னுடைய உடலை ஒருவன் அறிவதற்கு எவ்வாறு வெளியிலிருந்து அத்தாட்சி வேண்டுவதில்லையோ அவ்வாறே தன்னுடைய ஆத்மாவை அறிவதற்கும், வெளியிலிருந்து அத்தாட்சி ஏதும் வேண்டுவதில்லை.  எல்லா ஆசைகளையும் விட்டு ஆத்மாவைக் கண்டு அனுபவிக்க வேண்டும் என்ற தீவிரமான ஆசை மட்டும் தான் ஆத்ம தரிசனத்திற்கு அவசியமான ஸ்தானம்