சந்தோஷம் என்பது 4

மக்களில் அதிக பட்ச சதவிகிதத்தினர் வெந்ததை தின்று விதி வந்தால் மாள்வோம் எனும் மன நிலையிலேயே இருக்கின்றனர்.   ஒரு குறிப்பிட்ட சிறு சதவிகித மக்கள் மட்டுமே வெந்தது என்பது என்ன  என்று சிந்திக்கும் பழக்கம் உடையவராய் இருக்கின்றனர்.  இதில் தின்பது, விதி போன்றவையும் அடங்கும்.  அப்படி சிந்தித்து செயல்படும் மனிதரே வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் இன்பமாய் இருக்கின்றனர்.