ஸ்ரீ சங்கரரின் பார்வையில் ஆத்மா  9

ஒளிவடிவாயுள்ள சூரியனிடம் எவ்வாறு இருள் இல்லையோ அவ்வாறே அறிவு வடிவான ஆத்மாவில் அஞ்ஞானத்திற்கிடமில்லை. அவ்வாறே மாறுபாடற்ற ஆத்மாவில் மாறுபடும் நிலைகளுக்கிடமில்லை. அப்படி மாறுபடுமேயானால் அது அழிவுடையதாய்விடும்.