தற்போதைய காலம் 2

நுண்ணிய உணர்வுகள் அனைத்தையும் அனைத்தையும் இழந்து விட்ட பின் நான் என்பதிலும் வெற்றி பெற்றேன் என்பதிலும் சக்கையை தவிர வேறு என்ன இருக்கிறது. யோசிக்க நேரமில்லை, யோசிக்க ஆசையில்லை சரியாக சொன்னால் யோசிக்க தெரியவில்லை வேறு எப்படி எடுத்துக்கொள்வது உழைப்பின் உன்னதம் சிந்தித்தலின் அழகு அதை செயல்படுத்தலில் உள்ள நளினம் இவையெல்லாம் இக்கால இளைய தலைமுறையினர் அறியாத ஒரு விஷயமாக ஆகிவிட்டதே அதனால் அவர்கள் வாழ்க்கையே அவர்களுக்கு அந்நியமாகிவிட்டதை அறியாதவர்களாக ஆகிவிட்டார்களே என்ன செய்வது அறிந்தவர்கள் வருத்தப்படதான்…

ஸ்ரீ சங்கரரின் ஞானம் 10

நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கிப் பிரகாசிப்பது போல் கேள்வி முதலியவற்றால் கொழுந்து விட்டெரியும் ஞானத்தீயில் பரிசுத்தமான ஜீவன் எல்லா மலங்களும் நீங்கித் தன்னுடைய சுய ஒளியுடன் பிரகாசிக்கிறான். ஒன்றை மற்றொன்றாய்க் கொள்ளும் மதியீனம் பரிபூர்ண ஞானத்தாலன்றி வேறெதனாலும் நீங்காது. ஜீவன் பிரம்மமே என்று அறிந்தனுபவிப்பதுதான் பரிபூர்ண ஞானமென்பது வேதத்தின் முடிவு.