அனுபவ மொழிகள் 2

கண் எங்கு பார்க்குதோ இதயம் அங்கு உள்ளது. கடனில்லாத ஏழ்மை உண்மையான செல்வம். வலுவான காரணங்கள் வலுவான செயல்களை உருவாக்குகின்றன. நம்முடன் இருப்பவர்களை நாம் கவனித்துக் கொண்டோமானால், இறைவன் நம்மை பார்த்துக்கொள்வான். கண்களால் கற்றுக் கொள்வதைவிட காதுகளால் கற்பதே அதிகம்.