ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 3

அங்கம் தளர்ந்துவிட்டது, தலை நரைத்துவிட்டது, வாய் பல் இல்லாததாக ஆகிவிட்டது, கிழவன் கோலை ஊன்றிக்கொண்டு நடக்கிறான், என்றாலும் அவனுடைய மாம்ஸ பிண்டத்தை ஆசைவிடவில்லை. குழந்தையாயிருக்கும் பொழுது விளையாட்டின் பற்று, யெளவனத்தில் பருவப் பெண்ணிடம் பற்று, வயது முதிர்ந்தபொழுது கவலை, பரப்பிரம்மத்திடம், பற்றுக்கொண்டவன் எவனுமில்லை.

நம்ம புத்தி

நம்ம புத்தி வளர, வளர நமக்கு அழிவு நிச்சயம். நம்ம கண்டுபிடிப்பு வளர, வளர  நம்மளுடைய முடிவு மிகவும் நெருக்கம். கூட்டுக் குடும்பம் நம் கண்முன்னால் எப்படி உடைந்து சிதைந்தோ, அது போல குடும்பமும் இனி…… இதை நம்மனால ஏத்துக்க முடியாது காரணம் இதை நாம புரிஞ்சுக்காதது வளர்ச்சி தான் சரி அதுக்கு வேண்டி தான் நம்ம வாழ்க்கை வளர்ச்சி இல்லைனா வாழ்க்கைக்கே அர்த்தம் இல்லை அப்படின்னு சொல்லி குடுத்து வளர்க்கப்பட்டிருக்கற நமக்கு இது புரிய லேட்…