தனிமையில் இருப்பவர்களுக்கு

தனிமையில் இருப்பவர்களுக்கு வேலை தான் துணை. துன்பங்களையும், வேதனைகளையும் மட்டுமல்ல ஆசைகளையும், இன்பங்களையும் கூட வேலையில் ஈடுபட்டு தான் மறக்க வேண்டும். இந்த வித்தையை தெரிந்து பயின்று தெளிந்தவர்கள் தன் நிலை மாறாமல் கெளரவத்தை இழக்காமல் அவமானத்தை அடையாமல் கரையேறிவிடுகிறார்கள். இந்த வித்தை சூட்சமம் தெரியாதவர்கள் பாவம், வேறு என்ன சொல்வது.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 38

ஒருவரை சாதுவாகும்படி தூண்டியதற்காகத் தூய அன்னையாரைக் குற்றஞ்சாட்டி, ” மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுதலும் ஒருவகை மாதர் கோட்பாடே ” என்று கூறிய ஒரு பெண்மணியை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ” பெண்ணே, நான் சொல்வதைக் கேள், இவர்களெல்லாரும் தெய்வீகக் குழந்தைகள் முகரப்படாத மலர்களைப் போலத் தூய்மையான வாழ்வை அவர்கள் நடத்துவார்கள். இதைவிட மேன்மையானது வேறு ஏது? இம் மண்ணுலக வாழ்வு எத்தகைய துன்பத்தைத் தரும் என்பதை நீயே உணர்ந்திருக்கிறாய். இவ்வளவு நாட்களாக…