விடை தேடி 3

அவசர உலகில் எத்தனையோ பணிகளுக்கிடையில் இதையெல்லாமா யோசித்துக் கொண்டிருப்பார்கள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனாலும் ஒரு ஆளாக தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஒரு ஆசை தான் நமக்குள் நடைபெறும் சங்கதிகளை நாம் தெரிந்து கொள்ளாவிட்டால் பிறகு யார் தான் தெரிந்து கொள்வது? இப்படி சிந்தித்தால் என்ன? அதாவது நம்மிடம் சந்தோஷம் எனும் நிலை உண்டாவது மனதால் என்று தெரிந்து கொள்கிறோம், அப்போது உடலுக்கு சந்தோஷம் இல்லையா என்ற வினா வருகிறது, அதற்கு விடை உடலின் சந்தோஷத்தையும்…

ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு –22

எனக்கு இந்திரிய சுகங்களில் விருப்பமில்லை. ஆத்மானுபவமும் அறிவும், ஆனந்தமும் என்னிடம் நிரம்பியிருக்கின்றன. வெளியுலகத்தைப்பற்றிய எண்ணத்தினின்று நான் வெகு தூரம் விலகியுள்ளேன். வெளியே காணப்படாதது எதுவோ அதனால் என்னுள்ளம் மகிழ்கிறது. மஹாபூதங்களினும் நான் பெரியவனாதலால் அவற்றில் பொதிந்துள்ள சக்தியின் நன்மையெல்லாம் நானே. உற்பத்தி செய்யும் உணர்ச்சி வேகம் என்னிடம் இல்லை.