ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 19

ஆனந்தமும், அறிவும், ஆத்மானுபவமும் நிறைந்தவன் நான். காணப்படும் பிரகிருதியைப் பற்றிய எண்ணத்திலிருந்து நான் வெகுதூரம் விலகியவன். எது அப்ராகிருதமோ அதனால் நான் என் உள்ளத்தில் மகிழ்கிறேன். நான் தான் உலகங்களின் ஆதி. உபநிஷத உத்யானத்தில் விளையாடுபவன் நான். பொங்கி வழியும் துக்கக் கடலை வற்றச் செய்யும் வடவாக்னி நான். மேலும் கீழும் நாற்புறங்களிலும் என்னுடைய அதிசயமான பெருமைகளால் நான் அனைத்தையும் வியாபித்து நிற்கிறேன். வாதத்தாலும் பிரதிவாதத்தாலும், ஆராய்ச்சியாலும், நிர்ணயிக்கப்பட்தாய் காணும் பரம புருஷன் நானே.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 12 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நீச்ச உச்ச தன்மைகளுக்கும் பலாத்காரம், பிடிவாதம், நியாயம்,தர்மம், புண்ணியம், பாவம் இவைகளை சீர்தூக்கி பார்க்கும் அதிகாரம்பெறுவதோடு ஆயுளுக்கு பொறுப்பாளாரக நின்று இயங்கும் சனி.. * யோகத்தையும், உடல் உறுப்புகளில் இடுப்பிற்கு கீழ்உள்ளவைகளை செயல்படுத்தும் திறன், அருவருக்க தக்கவைகளை அனுபவிக்க தூண்டும் ராகு.. * ஞானம் எந்த காரியத்தை எவ்வகையில் செயல்பட வேண்டும். இடம், பொருள் அறிந்து செயல்படும் ஆற்றல் எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை போன்றவைகளை இயக்கும் கேது.. இவர்கள் நமது வினை, விதி செயல்களுக்கொப்ப…