ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 2

கேள்வி – ஒருவர் கடவுள் காட்சியை எவ்வாறு பெறமுடியும்? பதில் – அது அவன் அருளால் தான் முடியும். ஆயினும் தியானமும், ஜபமும் ஒருவர் பழகவேண்டும். அது மனத்தின் மலங்களை அகற்றும். பூஜை முதலான ஆத்மிகக் கட்டுப்பாடுகளும் தேவையே. பூவைக் கையில் எடுத்தால் வாசனையை அறிவது போலவும் , கல்லின் மீது சந்தனக் கட்டையைத் தேய்த்தால் மணத்தை முகர்வது போலவும், ஏற்படும். அவனருளின்றி ஏதும் அடையமுடியாது. நாங்கள் எவ்வளவோ ஜபம் செய்தோம், ஆத்ம ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆயினும்…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 1

கேள்வி – தெய்வீக அருள் எப்போது எனக்குக் கிட்டும்? பதில் – தவம் செய்வதால் மட்டும் தெய்வத்தின் அருள் கிடைத்துவிடும் என்ற நியதி இல்லை பழங்காலத்தில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தலைகீழாகத் தொங்கியும் தீயிடை நின்றும் மகரிஷிகள் தவம் செய்தனர். அப்போதும் கூட ஒரு சிலரே கடவுளின் அருள் பெற்றனர். கேள்வி – அன்னையே எவ்வளவோ தவம் செய்தேன், எவ்வளவோ ஜபமும் செய்தேன். ஆனால் அடைந்த பலன் ஏதுமில்லையே? பதில் — விலை கொடுத்து வாங்கக் கடவுள்…