ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 27

கேள்வி – அம்மா, என் மனம் அடிக்கடி அமைதியை இழந்து சிற்றின்பத்தையே நாடுகிறது. இது என்னை அச்சுறுத்துகிறது. பதில் – இதற்காக நீ பயப்பட வேண்டாம். இக்கலியுகத்தில் மனத்தால் தீங்கு நினைத்தால் பாவமாகாது என்பதை நான் உனக்கு அறிவுறுத்துகிறேன். இக்காரணத்தால் ஏற்படும் கவலைகளினின்றும் உன் மனத்தை விடுவி. இதற்காக நீ அஞ்ச வேண்டா. குழந்தாய், இம்மனம் மதங்கொண்ட யானையைப் போன்றது. வாயுவின் வேகத்தோடு மனமும் ஓடும். ஆகவே, ஒருவன் எந்நேரமும் விவேகத்தால் ஆராய்ந்து வரவேண்டும் இறைவனைக் காண…