ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு நம்பிக்கையூட்டும் மொழிகள் 6

ஒருவன் இறைவனிடம் சரண்புகுந்தால், தவிர்க்க முடியாத விதியின் கட்டளைகளும் அகற்றப்படுகின்றன. இத்தகைய மனிதனது தலையெழுத்தை விதியே தனது கரங்களால் துடைத்துவிடுகின்றது.

குற்றமில்லாத மனசுதான் 4

இப்ப புதுசா வந்துருக்கற விதி என்னன்னா யார் உரத்து பேசறாங்களோ அவங்க சத்தியம் பேசறாங்க அப்படிங்கறது தான் சத்தியத்துக்கே இது தான் கதின்னா உண்மைக்கு என்னன்னு சொல்லறது அடுத்தது குற்றம் குற்றம் அப்படின்னாலே ரெண்டு பேரோ அதுக்கு அதிகமாகவோ நபர்கள் சம்பந்தப்பட்டு இருக்கணும் சம்பந்தப்பட்டவங்க ஒன்னும் பிரச்னை இல்லை அப்படின்னு சொல்லிட்டா குற்றம் எங்கிருந்து வரும் உதாரணம் லஞ்சம்

வாழ்க்கையை நிர்ணயிப்பது

வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது திறமையோ, நமது அறிவோ, நமது கடமையோ அல்ல. அதை நிர்ணயிப்பது நமக்கு மீறிய சக்தி. அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வதே நமது கடமை. விதியின் புயலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள். யார், யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ, யார் கண்டது? இயற்கையின் விசித்திரத்தை நாம் அறிய முடியுமா? யாரே அறிவர்.

பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 12 கோள்களின் கோலாட்டத்தின் படி

* நீச்ச உச்ச தன்மைகளுக்கும் பலாத்காரம், பிடிவாதம், நியாயம்,தர்மம், புண்ணியம், பாவம் இவைகளை சீர்தூக்கி பார்க்கும் அதிகாரம்பெறுவதோடு ஆயுளுக்கு பொறுப்பாளாரக நின்று இயங்கும் சனி.. * யோகத்தையும், உடல் உறுப்புகளில் இடுப்பிற்கு கீழ்உள்ளவைகளை செயல்படுத்தும் திறன், அருவருக்க தக்கவைகளை அனுபவிக்க தூண்டும் ராகு.. * ஞானம் எந்த காரியத்தை எவ்வகையில் செயல்பட வேண்டும். இடம், பொருள் அறிந்து செயல்படும் ஆற்றல் எதையும் சிந்தித்து செயல்படும் தன்மை போன்றவைகளை இயக்கும் கேது.. இவர்கள் நமது வினை, விதி செயல்களுக்கொப்ப…

காலம் மறப்பதில்லை 1

மனிதன் தனது குழப்பங்களை தானே தான் வரவழைத்துக்கொள்கிறான். அவற்றிக்கு அவன் எங்கே எப்போது அழைப்பு விடுத்தான் என்பதை மறந்து போய் அவற்றை அவன் எதிர்க்கிறான். ஆனால் காலம் மறப்பதில்லை. அது சரியான தருணத்தில் சரியான முகவரியில் அது நீ விடுத்த அழைப்பை உனக்கு விநியோகிக்கவே செய்கிறது. நீ எந்த முகவரியில் இருந்தாலும் அந்த முகவரியை காலம் அறிந்து கொள்கிறது. சரியானபடி உன் அழைப்பை விநியோகிக்கவும் செய்கிறது. இது புரிந்தது என்றால் நமக்கு வினை, விதி பற்றிய அடிப்படை…

பகவத்கீதை தத்துவம் 2

ஐயோ ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே ! ஆனால், இந்த விஷயம் கண்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே ! அவன் மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே என்னை வேண்டுதலால் கட்டிப் போட்டு விட்டான். நான் அங்கு வரக் கூடாதென என்னிடமே வேண்டிக்கொண்டான். யாராவது தனதுபிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு வெகு நேரமாக காத்து நின்றேன். பீமனையும், அர்ஜுனனையும்,…

சூழ்நிலை

சூழ்நிலை என்பது காலத்தின் வசம் அந்த காலம் எப்போதும் நமக்கு அனுகூலமாய் இருக்காது. செய்ய நினைத்த, செய்ய வேண்டிய காரியத்தை செய்ய முடியாமல் போய்விடும். செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். யாருமே இதற்க்கு விதிவிலக்கல்ல. செய்யக்கூடாத காரியத்தை செய்ய விரும்பாத காரியத்தை செய்ய வேண்டியதாகிவிடும். வேண்டுமானால்  கால அளவுகள், செய்ய வேண்டிய காரியங்கள் மாறுபடலாம் மற்றபடி இதிலிருந்து யாரும் தப்பியது இல்லை  அவ்வளவுதான்.

கோள்களின் கோலாட்டம் – 1.7 – 12 லக்கினங்களின் ஆய்வு ரிஷப லக்கினம்4

இந்த லக்கினத்திற்கு குரு-செவ்வாய் சேர்க்கை, ராகு, கேதுக்களுடைய தொடர்பை பெற்று இருப்பின் இல்லற வாழ்க்கை பாதிக்கிறது. பிரிவினை, தாரதோஷம், வம்ச தோஷம் மனைவிக்கு அகால மரண தோஷம், ஆகிய பலன்களைத் தருகிறது. புதன், குருவுடன் கூடுவது, சம்பந்தப்படுவது, யோகத்தை கெடுத்துவிடுவதோடு நல்ல பலன்களையும் விருத்தி செய்வதில்லை. இதே புதன் செவ்வாயுடன் சம்பந்தப்பட்டால் நன்மையான பலன் நிச்சயம் தருகிறார். அவரவர் தசாபுத்திகளின் போது கை கொடுத்து உதவுகிறார்கள். சனி உச்சம் பெற்று குருவால் பார்க்கப்பட்டு இருந்தால் மட்டும் இராஜ…

கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 – 1.5 லக்ன நிர்ணயம்

லக்ன நிர்ணயம் கிரேதாயுகத்திற்கு நிஷேக முகூர்த்தமே ஜென்ம லக்கினமாகும். திரேதாயுகத்திற்கு – ஆதான முகூர்த்தமே ஜென்ம லக்கினம் துவாபர யுகத்திற்கு சிரசு உதயமே ஜென்ம லக்கினம். கலியுகத்திற்கு பூ உதயமே ஜென்ம லக்கினமாக கொள்ள வேண்டும் என்பது குமார சுவாமிகள் கருத்து. இக்கலியுகத்தில் சிசு தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளியே வந்து பூமியின் இயக்கத்தில் கட்டுப்படும் நேரமே அதாவது பூ உதய நேரமே ஜென்ம லக்கினமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தாயின் கர்ப்பத்தில் சிசு உள்ள போதே நவக்கிரகங்களின்…

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது

நமது வாழ்க்கையை நிர்ணயிப்பது நமது ஆசையோ, திறமையோ, அறிவோ, அல்ல. நம் கண்ணுக்கும் ,மனதிற்கும், நமது அறிவிற்கும் புலனாகாத ஒரு மாபெரும் சக்தி அந்த சக்தி விரும்பும் பாதையில் வாழ்வது மட்டும் தான் நம்மால் முடியும்  செயல் விதியின் புயலில்,  அந்த சக்தியின் சுழலில் மனிதர்கள் பலபடி எடுத்து வீசப்படுகிறார்கள், யார் யார் எங்கெங்கு மோதிக்கொள்கிறார்களோ எதனால் மோதிக்கொள்கிறார்களோ எப்படி மோதிக் கொள்கிறார்களோ யார் கண்டது இயற்க்கையின் விசித்திரத்தை அந்த மாபெரும் சக்தியின் ரகசியத்தை நம்மால் அறிந்துகொள்ள…

நட்பு

நட்பு என்பது உபயோகத்தோடு சம்பந்தமாகி விட்டால் உபயோகம் தீர்ந்ததும் நட்பு முறிந்துவிடும். நட்பு முறியாது இருக்கிறது என்றால் அங்கு பரஸ்பரம் நட்பாய் உள்ளவர்கள் உபயோகமாய் இருக்கிறார்கள் என்று அர்த்தம்  நட்பை உயர்வாய் எண்ணிக்கொண்டிருப்பவர்களுக்கு இது கொச்சையாய் தெரியலாம் நட்பை அசிங்கப்படுத்துவதாயும் நினைக்கலாம். ஆனால் சரியாய் நின்று உற்றுப்பார்த்தால் இந்த விஷயம் புரியும் உபயோகப்படாத எதுவும் இயற்கையில்  நீண்ட காலம் இருந்தது இல்லை. நட்பும் இதற்க்கு விதி விலக்கல்ல.