புரிந்துகொண்டால்

எது பார்க்கப்பட்டதோ அது காட்சி! எது கேட்கப்பட்டதோ அது கேள்வி! எது உணரப்பட்டதோ அது உணர்வு! எது அறியப்பட்டதோ அது அறிவு! இதில் ‘ நீ ‘ என்பதும் எங்கு ,எதில், எப்போது , கடைசியில் வரும் விடை நீ என்பது இல்லை என்பதே இதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது அவசியமில்லை உண்மை இதுதான் இதை புரிந்துகொண்டால் நிம்மதி புரியாவிட்டால் சங்கடம், வருத்தம், துக்கம், துயரம், அத்தனைதான்

விடை தேடி 1

எப்போதாவது ஒரு முறை தான் மனம் சந்தோஷமாக இருப்பது நமக்குத் தெரியவருகிறது. எந்த விஷயத்தில் சந்தோஷம் வந்தது என்று குறித்து வைத்துக் கொண்டு நாம் சில காலங்களுக்குப் பிறகு அதே விஷயத்தை நாம் அடைந்தாலும் மனம் சந்தோஷமாய் இருப்பதில்லை, ஏன்? என்ன காரணம்? என்று யாரேனும் இதை சிந்தித்தது உண்டா? அப்படி இது சிந்திக்க வேண்டிய விஷயம் தானா? வினா தான் உருவாகிவிட்டதே, இனி விடை தேடி பயணப்பட வேண்டியது தான், யாரேனும் துணைக்கு வருகிறீர்களா? ம்ம்,…