ஸ்ரீசங்கரரின் வேதாந்த முரசு — 14

சிரத்தையும் பக்தியும் தியானயோகமும் முமுக்ஷு விற்கு முக்திக் காரணங்களாக வேத வாக்கியம் கூறுகிறது. எவனொருவன் இவைகளில் நிலையாயிருக்கின்றானோ அவனுக்கு அவித்தையால் கற்பிக்கப்பட்ட உடலாகிற தலையினின்று விடுதலை ஏற்படுகிறது. அஞ்ஞானத்தின் கூட்டுறவால்தான் பரமாத்மாவேயாகிய உனக்கு ஆத்மாவல்லாததுடன் பிணைப்பும் அதனின்றே பிறவிச் சுழலும் ஏற்பட்டுள்ளன. ஆத்மா, அனாத்மாவாகிய இரண்டையும் பற்றிய பகுத்தறிவினால் எழும் ஞானத்தீ அஞ்ஞானத்தின் செயலை வேருடன் அழித்துவிடும். சீடன் — குருதேவரே, கருணை கூர்ந்து எனது கேள்விக்குச் செவி சாய்த்தல் வேண்டும். அதற்கு மறுமொழியைத் தங்கள் வாயிலிருந்து…