உலகம் பிரம்மாண்டமானது

இந்த உலகம் பிரம்மாண்டமானது என்பதை எந்த சந்தேகமும் இல்லாமல் நாம் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாம் பிரம்மாண்டமானவர் என்றால் சந்தேகமும், அவநம்பிக்கையும் கூடவே எப்படி என்ற கேள்வியும் வருகிறதே, யோசித்துப் பார்த்தால் நாம் பிறந்து, இறக்கும் வரை உள்ள அனுபவத் தொகுதிகள், அறிவு விஷயங்கள் அனைத்தும் பிரம்மாண்டமில்லையா?, எந்த சிந்தனையும், எதுவுமே தெரியாத நிலையில் பிறந்து, அவரவர் நிலைக்கு இந்த அளவு வந்திருக்கிறோமே என்பது பிரம்மாண்டமல்லவா. சரியாக சிந்தித்துப் பார்த்தால் வாழ்க்கையின் தொடர்ச்சி என்பது எத்தனை பிரம்மாண்டம்.…