கர்மா செயல்படும் விதம் 3

மனம் சும்மா இருந்தது என்றால் எண்ணங்கள் சிந்தனைகள் இல்லை. எண்ணங்கள் சிந்தனைகள் இல்லையென்றால் செயல்கள் இல்லை, செயல்கள் இல்லையென்றால் கர்மாக்கள் இல்லை. மனிதனிடம் இருக்கும் அற்புதமான பொக்கிஷம் மனம் ஆகும் அதன் வலிமையை, வல்லமையை, எத்தனை பேசினாலும் எத்தனை எழுதினாலும் தீராது. அந்த மனம் இல்லாததை இருப்பதாயும் இருப்பதை இல்லாததாயும் காட்டும் வலிமை உடையது.