சகல உயிர்களுக்கும் 1

சகல உயிர்களுக்கும் உணர்வு ஒன்றே . பசி, வலி, காமம், மரணம் இப்படியிருக்க மனிதர்களுக்குள் ஏன் இத்தனை முரண்பாடு. நான் பிறரையும், பிறர் என்னையும் புரிந்து கொள்ளாத வேதனை ஏன்? தன் உணர்வை தானே புரிந்து கொள்ளாத பரிதாபம். தன்னை மதிக்காத போது ஏற்படும் சிக்கல். மனிதன் ஏன் தன்னை மதிக்காமல் போனான். மாறுதல் ஏற்படுவதை மறுதலிக்க முற்பட்ட போது மாறுதல் வேண்டவே வேண்டாம் என்று ஆசைப்பட்ட போது ஆசையே துன்பத்திற்கு காரணமாயிற்று.