கோள்களின் கோலாட்டம் பாகம் – 1 முதல் பாவத்தின் முக்கிய விதிகள் 11

லக்கினாதிபதியும், 3 – க்குரியவரும் கூடி கேந்திரம் பெற்று 9 – க்குரியவரின் தொடர்பு பெற்றால் அழகு மிக்கவன் தர்ம குணம் உடையவன். வசதி வாய்ப்புக்களை பெறுவான்.  லக்கினாதிபதி பலம் பெற்று அந்த ராசியாதிபதி திரிகோணம் அடைய, 5 – க்குரியவர் பார்க்க, பாக்கியம் மிக்கவன். தனம் உள்ளவன் பூமி யோகம் உண்டு. 2, 3 – க்குரியவர் திரிகோணமடைந்து, சந்திரன் பார்க்க, தொடர்பு பெற, ஜோதிடம் சிற்பம், நன்னூல், கணிதம் இவைகள் அறிந்தவன்.  2 –…

30 -ந்தேதியில் பிறந்தவர்களின் பலன்கள்.

குருவின் ஆதிபத்தியமுடைய எண் இதுவாகும் . பொருளாதார வசதியைப் பொறுத்தவரையில் திருப்தி என்பது இருக்காது. தேவையானபோது வசதி அமையாது. செலவாளிகளாக இருப்பார்கள். முற்கால வாழ்க்கையைவிட பிற்கால வாழ்வில் சுகம் பெறுபவர்கள். நுட்பமான அறிவு கொண்டவர்கள். நெஞ்சழுத்தம் உடையவர்கள். ஆபத்தான காரியங்களில் ஈடுபட்டு வெற்றியை அடைவார்கள். தியாகிகளாவர்.