ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 2

கேள்வி – ஒருவர் கடவுள் காட்சியை எவ்வாறு பெறமுடியும்? பதில் – அது அவன் அருளால் தான் முடியும். ஆயினும் தியானமும், ஜபமும் ஒருவர் பழகவேண்டும். அது மனத்தின் மலங்களை அகற்றும். பூஜை முதலான ஆத்மிகக் கட்டுப்பாடுகளும் தேவையே. பூவைக் கையில் எடுத்தால் வாசனையை அறிவது போலவும் , கல்லின் மீது சந்தனக் கட்டையைத் தேய்த்தால் மணத்தை முகர்வது போலவும், ஏற்படும். அவனருளின்றி ஏதும் அடையமுடியாது. நாங்கள் எவ்வளவோ ஜபம் செய்தோம், ஆத்ம ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தோம். ஆயினும்…

அன்னை சாரதா தேவியின் அன்பு முரசு

உடன் சாதனப் பயிற்சியிலும், சொல்லிலும், செயலிலும் உண்மையாக இரு, அப்போது எவ்வளவு இன்பமாக உள்ளோம் என்பதை உணர்வாய். உலகிலுள்ள எல்லாப்பிராணிகளின் மீதும் ஆண்டவனது கருணை மழை பெய்கின்றது. அது வேண்டும் எனக்கேட்பது அவசியம் இல்லை. நீ உண்மையாகத்தியானம் பழகு. அப்போது ஆண்டவனின் அளவற்ற கருணையின் இருப்பை உணர்ந்து கொள்வாய். ஆண்டவன் நேர்மையையும் சத்தியத்தையும், அன்பையுமே விரும்புவான். வெளிப்பகட்டானவாய் வார்த்தைகள் அவனைத் தீண்டுவதுமில்லை.

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 1

கேள்வி – தெய்வீக அருள் எப்போது எனக்குக் கிட்டும்? பதில் – தவம் செய்வதால் மட்டும் தெய்வத்தின் அருள் கிடைத்துவிடும் என்ற நியதி இல்லை பழங்காலத்தில் ஆயிரக் கணக்கான ஆண்டுகள் தலைகீழாகத் தொங்கியும் தீயிடை நின்றும் மகரிஷிகள் தவம் செய்தனர். அப்போதும் கூட ஒரு சிலரே கடவுளின் அருள் பெற்றனர். கேள்வி – அன்னையே எவ்வளவோ தவம் செய்தேன், எவ்வளவோ ஜபமும் செய்தேன். ஆனால் அடைந்த பலன் ஏதுமில்லையே? பதில் — விலை கொடுத்து வாங்கக் கடவுள்…