பிண்டத்தில் நவகிரக விளையாட்டு 4 கோள்களின் கோலாட்டத்தின் படி ..

இந்த நவக்கிரகங்கள் மனித தேகத்தினுள் புகுந்து விளையாடும் போது? நான்.. எனது..சாதூர்யம்,திறமை,..பராக்கிரமம்,..புத்திசாலித்தனம், முயற்சி,.. என்பதெல்லாம் எங்கே? இந்த மனிதனுக்கு எது சொந்தம்? மனிதனின் தேகத்தில் அமைந்த 72000 நாடி நரம்புகளும், நவக்கிரகங்களின் உப அதிகாரிகள் பங்கு எடுத்து செயல்படுவதேயாகும். இம் மனிதனின் தேகத்தின் முக்கியமான அம்சம் வாதம்-பித்தம்-சிலேத்துமம். இவைகளில் குரு-புதன்-சனி-வாத அதிகாரியாகவும், சூரியன்-செவ்வாய்-ராகு-கேது பித்த அதிகாரியாகவும் நின்று செயல்படுவதை கண்கூடாக பார்க்கலாம்..

வெற்றி அடைய

நான் எனக்கு உள்ளே இருந்து என்னை பார்க்கிறேன் அப்படி என்னை பார்க்கும் போது நான் சார்ந்திருக்க கூடிய விஷயங்களை நம்பிக்கையுடன் வரவேற்க்கிறேன் எனது வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் எனக்கான பாடமாகவே பார்க்கிறேன் அதுமட்டுமல்ல என்னை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் பாடமாக பார்த்து அதிலிருந்து கவனமாக எனக்கு வேண்டியதை கற்றுக்கொள்கிறேன் எனது திறமைகளை மேலும் வளர்க்க எல்லா உபாயங்களையும் மிக சந்தோஷமாக கையாளுகிறேன் அதில் வெற்றி அடைவேன் என்று எனக்குள் முழுமையாக நம்புகிறேன் என்னுடைய நம்பிக்கை செயலுடன் கூடிய நம்பிக்கை…

ஒற்றுமை பற்றி சாதுவின் கண்ணோட்டம்

இரு அரசர்களுக்கிடையில் எப்போதும் சண்டை வந்து கொண்டேயிருந்தது. சாது ஒருவர் இவர்களின் ஒற்றுமைக்காக  பெரிதும் முயற்சி எடுத்துக் கொண்டார் இதைப் பார்த்த அவர்கள  அவரைத் திட்டினார்கள். இவர்கள் திட்டுவதைப் பார்த்த சாது மௌனமாக சிரித்துக்கொண்டார். நாங்கள்  உங்களைத் திட்டிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் சிரிக்கிறீர்கள் என்றார்கள். அதற்கு அந்த சாது என்னைத் திட்டுவதிலேயாவது உங்களுக்கு ஒற்றுமை இருக்கிறதல்லவா அது போதும் என்றார்..

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 21

உன் வேலைகளைச் செய்வதோடு தியானமும் பழகாதிருப்பின், செய்வது விரும்பத் தக்கதா, தகாததா என்பதைப் பிரித்தறிவது எப்படி? காலை, மாலைச் சந்தியா காலமே கடவுள் வணக்கத்திற்கு ஏற்றது. அப்போது மனம் தூய்மையாக இருக்கும். எவ்வளவோ தீவிரமாக முயற்சிகளில் ஈடுபட்டிருப்பினும் கடவுளை நினைத்து வணங்கவாவது வேண்டும். கொஞ்சங், கொஞ்சமாகத் தியானமும் பிரார்த்தனையும் செய்யும் நேரத்தை அதிமாக்க வேண்டும். மந்திரம் உடலைச் சுத்தமாக்குகின்றது. கடவுள் நாமத்தை உச்சரிப்பதால் மனிதன் பரிசுத்தனாகிறான். ஆகையால் அவன் நாமத்தை எப்பொழுதும் ஜபித்துக் கொண்டிரு. நீ செய்யும்…