மாகாளிக்கிழங்கு :

மாகாளிக்கிழங்கு : மாகாளிக்கிழங்கு ஊறுகாய் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். இது இரத்தத்தை சுத்தம் செய்வதுடன் செரிமான தன்மையும் அதிகரிக்கிறது தற்போது நாட்டு மருந்து கடைகளில் உண்மையான நன்னாரிக்கு பதிலாக மாகாளிக்கிழங்கே அதிகம் கிடைக்கிறது. இதனை கொண்டு சர்பத் மற்றும் உடல் குளிர்ச்சி ஏற்படும் பலவிதமான பானங்களையும் தயார் செய்யலாம் . இவற்றை முறைப்படி பயன்படுத்தி வெப்ப காலத்தில் ஏற்படும் உடல் சூட்டையும் சிறுநீர் எரிச்சல் போன்ற உபாதைகளையும் தவிர்க்கலாம்.