ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 38

ஒருவரை சாதுவாகும்படி தூண்டியதற்காகத் தூய அன்னையாரைக் குற்றஞ்சாட்டி, ” மணம் புரிந்து கொண்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடுதலும் ஒருவகை மாதர் கோட்பாடே ” என்று கூறிய ஒரு பெண்மணியை நோக்கித் தூய அன்னையார் கூறியதாவது, ” பெண்ணே, நான் சொல்வதைக் கேள், இவர்களெல்லாரும் தெய்வீகக் குழந்தைகள் முகரப்படாத மலர்களைப் போலத் தூய்மையான வாழ்வை அவர்கள் நடத்துவார்கள். இதைவிட மேன்மையானது வேறு ஏது? இம் மண்ணுலக வாழ்வு எத்தகைய துன்பத்தைத் தரும் என்பதை நீயே உணர்ந்திருக்கிறாய். இவ்வளவு நாட்களாக…

ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 33

பெண்களுக்கு உபதேசம். ஒரு பெண்ணுக்கு அடக்கமே சிறந்த அணிகலன். தெய்வீக உருவின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்படும்போதுதான் ஒரு மலர் தன்னைப் பாக்கியசாலியாகக் கருதுகிறது. இல்லாவிட்டால் அம்மலர் செடியிலேயே வாடிவிடுவது சாலச்சிறந்தது. ஆடம்பரக்காரன் ஒருவன் அம்மலர்காளல் ஒரு பூச்செண்டு செய்து அதை முகர்ந்து ‘ என்ன நறுமணம் ‘ என்பதைக் காண்பது எனக்கு மிக்க வருத்தத்தைத் தருகிறது.