ஸ்ரீசங்கரரின் பஜகோவிந்தம் 12

புண்ணியமும், பாவமுமில்லை, இன்பமும், துன்பமும் இல்லை, மந்திரங்களும், தீர்த்தங்களும், வேதங்களும், யாகங்களுமில்லை, நான் புசிப்பவனன்று, புசிக்கப்படுவதுமன்று, புசிக்கும் செயலுமன்று, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான் சிவமே நான். எனக்குச் சாவில்லை, பயமில்லை, ஜாதிபேதமில்லை, எனக்குத் தாயில்லை, தந்தையில்லை, பிறப்புமில்லை, எனக்குச் சுற்றமுமில்லை, நட்புமில்லை, எனக்கு குருவுமில்லை, சீடனுமில்லை, அறிவும் ஆனந்தமுமே உருக்கொண்ட சிவம் நான், சிவமே நான்.

தெய்வ வழிபாடு என்பது யாது?

ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வ வடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான். இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார், ‘‘மனமது நினைய வாக்கு வழுத்த…