ஸ்ரீ சாரதா தேவியாரின் அன்பு முரசு 51

பணியைப் பெறும் அம்மனிதரைப் பொம்மை போல அடக்கியாள அவன் விரும்புகிறான். பின் உணவருந்தல், உட்காருதல், எழுதுதல் முதலான ஒவ்வொன்றிலும் அவரை ஏவ விரும்புகிறான். பணி செய்யும் விருப்பத்தை அவன் இழக்கிறான். அநேக மகான்கள் தம்மைச் சுற்றிலும் செல்வத்தையும், சிறப்பையும் உண்டாக்கிக் கொள்கிறார்கள். அதனால் பல மனிதர் அவருக்கு வேலையாளாக வரப் பிரியப்படுகின்றனர். அவர்கள் தங்கள் பதவியின் சுகங்களில் மதி மயங்கித் தங்கள் அழிவுக்குத் தாங்களே வழிதேடிக் கொள்கிறார். தக்க மனநிலையுடன் பணி செய்ய விரும்புபவர் எத்தனை பேர்…